பக்கங்கள்

Friday, March 7, 2008

பாசக்கார பய...

சமீபத்தில் ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட போது கண்ட காட்சி, அந்த இறந்து போன நபர் ஆசையாக வளர்த்த நாய் அவரது மறைவின் போது அருகிலிருந்த வீட்டின் கொல்லைப் புறம் கட்டப்பட்டிருந்தது. எல்லோரும் அவரது மறைவின் காரணம் துக்கப்பட்டு இருந்ததால் இரண்டு நாட்களாக அந்த நாயை யாரும் கண்டு கொள்ளவே இல்லை. பாவம் சாப்பாடு போடக் கூட மறந்து விட்டார்கள். அந்த நாய் தன்னை யாரும் கண்டு கொள்ள வில்லையே என்று அங்குமிங்கும் அலை மோதியது. தன்னுடைய எசமானன் எங்கே என்று தேடியது, தவித்தது. தனக்கு ஒருபோதும் இப்படி ஆனதில்லையே என்று அந்த பாசக்கார ஜந்து பரிதவித்தது. மூன்றாம் நாள் காலை அந்த இறந்து போனவரின் மகள் நியாபகம் வந்தவளாக ஓடோடி வந்து, நாயை அவிழ்த்து தனது வீட்டிற்க்கு எடுத்துச் சென்றாள். அவளைக் கண்டவுடன் அந்த நாய் வாலை ஆட்டியபடி பாசத்துடன் அவளிடம் தாவிச் சென்றது. இப்போதும் அந்த நாய் அந்த வீட்டு வாசலில் கட்டப் பட்டிருக்கிறது. சாலையில் செல்லும் ஒவ்வொருவரையும் பார்த்தபடி தன் எசமானன் இதோ வந்து விடுவான், தன்னை அவன் மடியில் வைத்து கொஞ்சுவான் என்று எதிர் பார்ப்புடன் காத்திருக்கிறது...
-- இன்னும் எழுவோம்ல...
Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

No comments: