பக்கங்கள்

Sunday, May 11, 2014

நம்பிக்கை துரோகம்...!


நம்பிக்கை துரோகம் !

நம்பிக்கை துரோகம்...
திட்டமிட்டு செய்வதும்....
தற்செயலாய் செய்வதும்..
விளயாட்டாய் செய்வதும்..
தெரிந்தே செய்வதும்..
சுயலாபத்திர்க்காக செய்வதும்..
என எப்படி ...
நியாயபபடுத்தினாலும்..
மன்னிக்க முடியாத
மாபாவம்...!

இதைவிட..
ஒருமுறை
மன்னிக்கப் பட்ட
நம்பிக்கை துரோகம்..
மறுபடியும் ...
இன்னொருமுறை ...
துளிர் விட்டால்..
அது -
மீளவே முடியாத
மிகபெரிய சாபம்...!

நம்பிக்கை துரோகம் ..
உங்களுக்குள் எட்டிப்பார்க்கிறது ...
என யார் சொன்னாலும்..
எதிர் வாதம் வேண்டாம்..
வேரோடு ..
அழிக்க முயலுங்கள்...
உங்கள் வாழ்க்கை ...
பலம் பெறும்...!

நீங்கள் புரிந்த ..
நம்பிக்கை துரோகத்தை ...
ஒருபோதும்..
நியாயபபடுத்தா தீர்கள்...!
தவிர்த்து விடுங்கள் ..
மனித தன்மை ...
உங்களுக்குள் வாழும்...!

நம்பிக்கை துரோகாதீர்க்கான ..
காரணங்களை ..
வரிசை படுத்த வேண்டாம்...
விட்டு விலகுங்கள்..
உறவுகளில் ....
உண்மை விதைக்கபடும்...!

நம்பிக்கை துரோகத்தினால் ...
நீங்கள் அடைந்த ...
சுய லாபம்..
உங்களுக்குள் ...
கலக்கும் நச்சு..
சுத்தப்படுங்கள்..
சுகமான ..
சுதந்திர திருப்தி ...
உங்களிடம் மட்டுமே...!

நம்பிக்கை துரோகம் ..
உங்களுக்குள் எட் டி பார்த்தால்...
எல்லாமே ..
கேவல பட்டு போகும்...!
தோல்வியும்..
விரக்தியும் ..
நஷ்டமும்...
சோகமும்...
தடையும்..
தொடர்ந்து கொண்டே போகும்..!

நம்பிக்கை துரோகம்
நம் வாழ்க்கை
அகராதியில்
நீக்கபட வேண்டும்...!

பிறகென்ன ....

நமது வாழ்க்கை
முழுவதும்
நம்மோடு
நம்பிக்கையும்
துணை வரும்.....!...!


Thanks: http://polimershafi.blogspot.in/2013/09/blog-post_27.html


Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

திருநந்திக்கரை -- அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில்



 திருநந்திக்கரை --அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில்

--குடைவரை கோயில் ( 1000-2000 வருடங்களுக்கு முன்)--

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன. இவற்றை சிவாலய ஓட்ட கோயில்கள் என்கின்றனர்.

சிவராத்திரி திருநாளின்போது இந்த 12 கோயில்களுக்கும் ஓடியே சென்று வழிபடுவது பக்தர்களின் வழக்கமாக இருக்கிறது. இவற்றிற்கு இடையேயான தூரம் 100 கி.மீ., இப்போதும் பக்தர்கள் ஓடிச்செல்லும் வழக்கத்தை கைவிடாமல் வைத்திருக்கிறார்கள். இவற்றில் திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயிலும் ஒன்று.

இந்த கோயிலின் விசேஷமே நட்சத்திர மண்டபம் ஆகும். 27 நட்சத்திர மண்டலம் கொண்ட கண துவாரங்கள் இங்கு உள்ளன. இந்த மண்டபத்தில் ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதைக் குறிக்கும் வகையில் மண்டபத்தைச் சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டைகளில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மண்டபத்தை 27 நட்சத்திரத்தை சேர்ந்தவர்களும் ஒரு தடவை சுற்றிவந்தால் ஒரு ஆண்டுகாலம் சிவன் கோயிலை சுற்றி வந்த பலன் கிடைக்கிறது.







Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

முட்டம் கடற்கரை ... (Muttam Beach)

அலைகள் ஓய்வதில்லை, கடலோர கவிதைகள் உள்பட பல்வேறு தமிழ் சினிமாக்கள் படம்பிடித்துக் காட்டியுள்ள இடம் முட்டம் கடற்கரை..

தமிழகத்தின் அழகிய கடற்கரை என்றால், அதில் முதல் இடத்தை முட்டம் கடற்கரைதான் பிடிக்கும். பாறைகள் நிறைந்து காணப்படும் தமிகத்தின் கடற்கரைகளில் இதற்கு தான் முதலிடம். இந்த கடற்கரைக்கு வடமேற்கில் செம்மண் அகழிகளும் உள்ளன. இதுபோன்ற பாங்கை வேறு எங்கும் பார்க்க இயலாது.

கடற்கரை என்றாலே நீண்ட மணற் பரப்பை மட்டுமே அறிந்திருக்கும் மக்களுக்கு இந்த பகுதி ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

பாறைப் பகுதிக்கும், கடற்பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில் கடற்கரை. எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். பாறைப் பகுதிகளில் கூட தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சற்று அபாயமான கடற்பரப்பு என்றும் கூறலாம்.இங்கு மெரினாவில் செய்வது போல குளியல் எல்லாம் செய்ய இயலாது. கடற்கரை காற்றில் மிதந்தவாறு நன்றாக ஓடியாடி விளையாடலாம்..



 

திருமண தோஷங்கள் நீக்கும் நங்கநல்லூர் ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர்

~~~~ திருமண தோஷங்கள் நீக்கும் நங்கநல்லூர் ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர் (32 அடி உயர ஆஞ்சநேயர் ) ~~~~

சென்னை, நங்கநல்லூரில் 32 அடி உயர பக்த விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில், ரமணி அண்ணாவால் ஸ்தாபிக்கப்பட்டது.

32 அடி உயரத் திருமேனி என்றபோதும் கைக்கூப்பித்தான் நிற்கிறார். ‘வளரவளர பணிவும் வளர வேண்டும்’ என்கிற உபதேசமாகத் தோன்றுகிறது இந்தக் காட்சி!

சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ளதை போல 32 லட்சணங்களைக் கொண்டவர் இந்த ஆஞ்சநேயர். இந்த இடத்துக்கு இவர் வந்ததிலிருந்து,மெய்சிலிர்க்க வைக்கும் பல அதிசயங்களை நிகழ்த்தி கொண்டிருக்கிறார். இந்த திருமேனியை ஒரு கொட்டகையில் வைத்து செதுக்கி கொண்டிருந்த நேரத்தில், விடியற்காலையில், அதாவது 2.30-3.00 மணி அளவில் தினமும் மரக்கட்டை காலணி (பெரிய மகான்கள் அணிந்து கொள்வது) சப்தம் கேட்பதை சிற்பிகள் உணர்ந்திருக்கிறார்கள்.

இந்த சத்தம் எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது? என பெரியவர்களை கேட்டபோது, பக்கத்தில் இருக்கும் ஸ்ரீராகவேந்திரர் ஆலயத்திலிருந்து ஸ்ரீ ராகவேந்திரர்தான் தம் இஷ்ட தெய்வமான ஆஞ்சநேயரை தரிசிக்க வருகிறார் என்று சொன்னார்கள்.

இதேபோல இன்னொரு சம்பவம்: ஆஞ்சநேயரின் சிலைக்கு உறுதி ஊட்டுவதற்காக, 40 அடி தொட்டியில் தண்ணீர் நிரப்பி, அதில் சிலாரூபத்தை வைத்திருந்தோம். தீடீரென ஒருநாள், தொட்டி உடைந்து போய் விட்டது. மனம் சஞ்சலப்பட்டு பெரியோர்களிடம் கேட்டபோது, “தானாகவே தண்ணீர் தொட்டி உடைந்தது நல்ல சகுணம்தான்” என்று கூறினார்கள். இப்படி பலப்பல சம்பவங்களைச் சொல்லலாம்.

பிரமாண்டமாக காட்சியளிக்கும் ஆஞ்சநேயருக்கு பிரதி சனிக்கிழமை தோறும் விஷேச பூஜைகள் நடக்கிறது. அது தவிர ராமர் அவதரித்த நாளாம், ராம நவமி, அதனை ஒட்டி நடக்கப்படும் ராம உற்சவம் போன்ற வைபோகங்களில் வடமாலை , மற்றும் துளசி மாலைகள் சார்த்தப்பட்டு விஷேச பூஜைகள் நடத்தப்படுகிறது. மேலும் அனுமன் ஜெயந்தி உற்சவத்தில் சுவாமிக்கு அபிஷேக அலங்காரத்துடன் விஷேச பூஜைகள் நடக்கிறது.

ஆஞ்சநேயரை வணங்கினால் திருமண தோஷங்கள், புத்திர பாக்கியம் கிட்டும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் இளம் வயதினர் ஏராளமானோர் ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கின்றனர். கோயில் அதிகாலை 3 மணியளவில் திறந்து மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. பிறகு 4.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

Saturday, May 10, 2014

குரு இருந்த மலை " குருந்தமலை" (இன்னொரு பழனி ) - அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி கோயில், காரமடை (கோவை)


காரமடையிலிருந்து 5 கி.மீ. தொலைவில், கோயம்புத்தூரிலிருந்து 24 கி.மீ. தொலைவிலும்  அமைந்துள்ளது. 

சுமார் 750 வருடங்களுக்கு முன் இக்கோவில் உருவானதாக தெரிகிறது.  ஆலயத்தில் இடம்பெற்றுள்ள சிற்பங்கள் ஹோய்சாள மன்னர் காலத்தை ஒத்து இருக்கின்றன..

செல்வம் பெருகவும், புத்திரபேறு இல்லாத தம்பதியினர் குழந்தை வேலாயுதனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.

இங்கு "குருந்த மரங்கள்" நிறைய இருந்த காரணத்தால் 
குருந்த மலை என பெயர் வந்ததாகவும், அகத்தியருக்கு முருகன் குருவாக இருந்தது உபதேசித்ததால் குருந்த மலை என பெயர் வந்ததாகவும் இரு வேறு கருத்துக்கள் உண்டு.

˜மூலவர் குழந்தை வேலாயுத சுவாமி ஞான வடிவமாக மேற்கு நோக்கி அருள்பாலிப்பதும், பழநி முருகனைப் போல் காட்சிதருவதும் சிறப்பாகும் கருவறை விமானமும் பழநி முருகன் கோயிலில் இருப்பதைப் போன்றே உருவாக்கப்பட்டுள்ளது. அகத்தியரும் சூரியனும் கார்கோடன், புஜங்கள் எனும் நாகங்களும் பூஜித்த தலமிது. முருகனின் வாகனங்களில் மயிலுக்கும் நாகத்திற்கும் ஒரு தனிச் சிறப்புண்டு அல்லவா! இம் மலையினும் சுற்றியுள்ள இடங்களிலும் மயில்கள் தோகை விரித்து ஆடுவது கண்கொள்ளாக் காட்சி. .

சப்த காண்டத்தில் குருந்த மலை பற்றி குறிப்பு உள்ளது. மேலும் "குருந்த மலை மாலை " "குருந்த மலை பதிற்றுப் பத்து அந்தாதி ",  "குருந்த மலை பிள்ளைத்தமிழ் " , " குருந்த மலை திருப்புகழ்
  " போன்ற நூல்கள் இந்த குருந்த மலையின் சிறப்பை , பெருமையை பறை சாற்றுகின்றன..







Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

~~ அற்புதங்கள் அருளும் காரமடை நஞ்சுண்டேஸ்வரர் ! (Karamadai Nanjundeswarar ) ~~


சுமார் 1000 வருடங்களுக்கு மேல் பழமையான இந்த கோவில் காரமடை ரங்கநாதர் கோவிலின் அருகே இடதுபுறம் அமைந்துள்ளது. திருமண, சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் சிவன், அம்பாள், சிவதுர்க்கைக்கு வஸ்திரம் அணிவித்து, வேண்டிக்கொள்கிறார்கள்.

இக்கோயிலில் உள்ள சிவலிங்கம், பிற தலங்களைப்போல இல்லாமல் சற்று பட்டையாக இருக்கிறது. இந்த லிங்கம் செந்நிறமாக காட்சியளிப்பது மற்றொரு விசேஷம். இவருக்கு பிரதான ஆவுடையார் தவிர, சன்னதிக்குள் சிவலிங்கத்தைச் சுற்றி, மற்றொரு ஆவுடையார் போன்ற அமைப்பில் தரையில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இவர் இரண்டு ஆவுடையார்களுடன் காட்சி தருகிறார். இந்த அமைப்பை காண்பது அரிது.

இந்த வித்யாசமான அமைப்பினால் கோவில் பூசாரி, ஆவுடையாரின் மேல் நின்று இன்னொரு ஆவுடையாரின் மேலுள்ள லிங்கத்தை பூசை செய்வது போல் உள்ளது (ஒரு லிங்கத்தின் மேல் நின்று மற்றொரு லிங்கத்தை பூசிப்பது போல). 

இன்னுமொரு முக்கிய விஷேசம், பிரதோஷ காலங்களில் சிவனுக்கு அமுது ( வெறும் சாதம் சிறிதளவு நெய் கலந்து) திருமேனியில்  சார்த்தபடுகிறது.. பின்னர் அந்த அமுதை எடுக்கும்போது லிங்கத்தின் கழுத்தருகே சிறிய அளவில் பச்சை நிறமாக அமுது காட்சி தருகிறது (நஞ்சை உண்ட சிவனின் கழுத்தில் ஆலகால விஷம் தங்கி உள்ளதாக ஐதீகம்).. இத்தனைக்கும் அமுது படைக்கும் முன்பு சிவலிங்கம் நன்கு தேய்த்துக் கழுவப் படுகிறது..  

முகலாயர் காலத்தில் கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட போது, நஞ்சன்கூடு (மைசூரு)  நஞ்சுண்டேஸ்வரர்  கோவிலிலிருந்து எடுத்து வரப்பட்ட கல்லைக் கொண்டு இங்கு கோவில் அமைக்கப்பட்டது. எனவே அந்த கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வழிபடலாம் .

மதுரை மீனாட்சியம்மன் கோயில் போலவே, சிவன் சன்னதியைச் சுற்றிலும் கோஷ்டத்தில் 8 யானைகள் சுவாமி விமானத்தை தாங்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது.அம்பாளின் திருநாமம்-லோகநாயகி அம்பாள். விநாயகர், ஆறுமுகவேலவர், சண்டிகேஸ்வரர், கால பைரவர் ஆகியோருக்கும் இங்கே சன்னதிகள் உண்டு.

நவராத்திரி விழாவின் பத்தாம் நாளில் ரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் இக்கோயிலுக்கு வந்து அம்பு போடும் நிகழ்ச்சிக்கு சிவனை அழைத்துச் செல்வது விசேஷம். அப்போது சிவன், பெருமாள் இருவரும் அருகருகில் செல்கின்றனர். அந்நேரத்தில் மட்டுமே இவ்விருவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.

அனைவரும் தரிசிக்க வேண்டிய அற்புதமான ஸ்தலம்.  வாய்ப்பை உருவாக்கி சென்று வாருங்கள்.



Sunday, September 2, 2012

யார் இந்த பவர் ஸ்டார் ??


யார் இந்த பவர் ஸ்டார் ?? .. உள்ளூர், உலக ரசிகர்களின் குரல் .....   ;)

வேல மெனக்கெட்டு செஞ்சிருக்காங்க ......

பவர் ஸ்டாரை தொட்டா நீ கத்திரிக்கா....



ரெண்டாயிரத்து TWELVE !!! 

கொல கொலையா முந்திரிக்கா.. பவர் ஸ்டாரை தொட்டா நீ கத்திரிக்கா.... 

கட்டாயம் பார்க்க வேண்டிய காமடி...

மினரல் வாட்டர் உபயோகிப்பவர்களே, உஷார் !!!!

மினரல் வாட்டர் உபயோகிப்பவர்களே, உஷார் !!!!

நாங்கள் வழக்கமாக உபயோகிக்கும் PEOPLE பிராண்டு மினரல் வாட்டரில் இன்று புழுக்களைப் பார்த்து அதிர்ந்து போனோம். உடனே அந்த கம்பனிக்கு போன் செய்து விசாரிக்கலாம் என்று இந்த நம்பர்களை டயல் செய்தால் எந்த எண்ணும் உபயோகத்தில் இல்லை ...எவனோ எதோ ஒரு முட்டு சந்தில் பைப் தண்ணியை பாக் செய்கிறான் என்று நினைக்கிறேன். 

உடனே வேறு பிராண்டு வாங்கினேன். ஆனால் அதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. அருகில் இருக்கும் டாக்டரிடம் கேட்டபோது அவர் சொன்னார் : மினரல் வாட்டர் வாங்காதீர்கள். உங்கள் வீட்டில் வரும் கார்பரேசன் நீரையே நன்கு கொதிக்க வைத்து வடி கட்டி உபயோகியுங்கள். அது உடலை பாதிக்காது என்றார். 

உஷார் நண்பர்களே .... காசு கொடுத்து வயிற்றுப் போக்கு, வாந்தி பேதி வாங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

Sunday, August 26, 2012

நஞ்சை உண்ட சிவன் ! நஞ்சுண்டேஸ்வரா கோவில் @ நஞ்சன்கூடு, கர்நாடகா (Nanjundeswara)

நஞ்சுண்டேஸ்வரர் - எங்கள் குலதெய்வ சாமி 

மூலவர் கவசம் 
இராஜ கோபுரம் 

500-1000 வருடத்திற்கு   மேல் பழமை வாய்ந்த  இந்த நஞ்சுண்டேஸ்வரர்  கோவில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்லும் வழியில் 100 வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. ஆலகால விசத்தை உண்ட சிவன் இங்கு அருள் பாலிக்கிறார். 

கபினி ஆறு அருகே பாய்கிறது . நதியில் நீராடி பின் சிவனை வணங்கலாம்.

திப்பு சுல்தானின் பட்டத்து யானையின் கண் பார்வையினை சரி செய்த அற்புத சிவன் இவர் . அதனால் மகிழ்ந்த திப்பு சுல்தான் மரகத லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டான் . பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரின்  குறையும் இவர் தீர்த்து வைத்து உள்ளார் . எனவே ஆங்கிலேயர்கள் இந்த கோவிலை சேதபடுத்த வில்லை. 

அற்புதங்கள் அருளும் வெண்ணை விநாயகர் 
பன்னாரி அம்மன் கோவிலைத்  தாண்டி  ஆசனூர்  செல்லும் மலைப்பாதை  பயணம்  மிகவும் அருமையானது . புள்ளி மான்கள் , குரங்குகள், யானைகள்  அழகிய மேற்குத்  தொடர்ச்சி  மலை முகடுகளை , சில்லென்ற காற்றை அனுபவிக்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட தங்கும் வசதிகளுடன் 
சங்கம தீர்த்தம் 

புதருக்குள் ஒரு குட்டி யானை 
கோபுரத்தில் சிற்பம் 

மலைப்பயணத்தில் .....
மலைப்பயணத்தில் ....


சத்தியில் (ஈரோடு  மாவட்டம்) இருந்து 2 1/2 மணி பயணத்தில் கோவிலை அடையலாம். அனைவரும்  தரிசிக்க வேண்டிய சக்தியுள்ள சிவன்.

Wednesday, August 15, 2012

உண்மையான இந்தியனுக்கு ஒரு கேள்வி : எது சுதந்திரம்?

இன்று 66 வது சுதந்திர தினம் கொண்டாடுகிறோம். ஆனால் இது உண்மையான  சுதந்திரமா ? 

சொந்த நாட்டின் மீனவக் குடிமகனை காப்பாற்ற முடியவில்லை! வெளிநாடு வாழ் இந்தியனுக்கு குரல் கொடுக்கும் நாம் சொந்த நாட்டின் குடிமகனின்  சவக்குழிக்கு மேல் நின்று கொண்டல்லவா சாகசம் பேசுகிறோம்?! என்ன ஒரு வெட்கக்கேடு !!! 

இன்னும் சுமார் 1.6 இலட்சம்  கொத்தடிமைகள் இந்தியாவின் குவாரிகளில், வட இந்திய முறுக்குக் கடைகளில், சாலையோரப் பணிகளில், தொலை தூர  எ ஸ்ட்டேட்களில் ,  கட்டுமானப் பணிகளில்  முடங்கியுள்ளனர் . 

அரசுத்துறைகளின் மற்றும் அரசியல்வாதிகளின் லஞ்ச லாவண்யங்களில் நாட்டின் பொருளாதாரம் சிக்கி சீரழிந்து கொண்டு இருக்கிறது. நாட்டின்  கனிம வளங்கள், சுயநல தனி நபர்களை ,  கடமை தவறிய அதிகாரிகளை வளப்படுத்தி இருக்கிறது...

எங்கும் கொள்ளை ! எதிலும் கொள்ளை !!!
ஆற்றிலும் கொள்ளை! வனத்திலும் கொள்ளை! மலையிலும் கொள்ளை ! சுடுகாட்டிலும் கொள்ளை !  ஆன்மிகவாதிகள்  பெயரில் கொள்ளை ! யோகா குருக்கள் கொள்ளை !  அடப் போங்கையா ....டாஸ் மாக்கில் கூட கொள்ளை அடிக்கிறார்கள் ....

கல்வித்தந்தைகள் (இல்லை கர்ப்பரேட் தந்தைகள்), LKG முதல் பட்டப் படிப்பு வரை மாணவர்களைக் கொள்ளை அடிக்கிறார்கள்..

நடுத்தெருவில் பெண்கள் மானபங்கப் படுத்தப்படுகிறார்கள். தந்தையின் முன் மகளை மானபங்கம் செய்கிறார்கள். வீட்டு வேளைகளில், நிறுவனங்களில் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப் படுகிறார்கள் .

இந்த இலட்சணத்தில் 66 வது சுதந்திர தினம் கொண்டாடுகிறோம். அதுவும் துப்பாக்கி முனைகளில் ?!  எங்கு  குண்டு வெடிக்கும்? எங்கு தீவரவாதிகள் கைவரிசை இருக்கும் என்று ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் போலீஸ் மற்றும் ராணுவ சுவர்களின் பின்னால் நமது சுதந்திர விழாக்கள் நடக்கின்றன. 

இதுவல்ல சுதந்திரம்.... உண்மையான சுதந்திரம் இன்னும் தொலைவில் உள்ளது ....



Sunday, August 14, 2011

புட்டபர்த்திக்கு பிறகு மேல்மருவத்தூரும் ???????

செய்திகளில் பார்த்திருப்பீர்கள்... சாய்பாபாவுக்குப் பிறகு புட்டபர்த்தி  வெறிச்சோடிப் போய்விட்டது. அங்கு எல்லாத் தொழிலும் முடங்கி விட்டது. வாழ்க்கை நடத்துவதே சிரமம் ஆகி விட்ட புட்டபர்த்தி இன்னும் சில மாதங்களில் கை விடப்பட்ட ஊராகி விடும். சாய்பாபா யாரையும் தனது வாரிசாக அறிவிக்காத நிலையில் புட்டபர்த்தியின்  மொத்த பொருளாதாரமும் முடங்கி விட்டது.  
சரி.. என்ன நடக்கிறது மேல் மருவத்தூரில்?
மேல்மருவத்தூர் 'அம்மாவின்' தொழில் நகரம். அவரது பள்ளிகள் கல்லூரிகளால் ஊரே நிறைந்துள்ளது. ரியல் எஸ்டேட் உட்பட அனைத்தும் கோவில் மற்றும் அம்மா இவர்களை சார்ந்தே உள்ளது.  இவரும் தனது வாரிசை அறிவிக்காத நிலையில் ஊரின் எதிர்காலம் புட்டபர்த்தியை  எண்ணிப் பார்க்க செய்கிறது. நீங்கள் ஏதும் அங்கே சொத்து வாங்கி உள்ளீர்களா? வாங்கப் போகிறீர்களா?? கவனமப்பா... கவனம்....

சமச்சீர் கல்வியா? தரமான கல்வியா?

இதெல்லாம் ஒரு  தரமான  கல்வியா  என்று சொல்கிற வகையில் நம் கல்வித்தரம் இப்போது இருக்கிறது. வாழ்க்கைக் கல்வியை இவை நம் தலை முறைகளுக்கு சொல்லித் தரவில்லை. தினமும் இரவு 9 மணிக்கு  மக்கள் டிவி இல் ஒளிபரப்பாகும் 'கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை' பார்பவர்களுக்குத் தெரியும் நம் குழந்தைகளின் பொது அறிவு எப்படி இருக்கிறது என்று. பத்தாவது படிக்கும் பெண் சொல்கிறாள் நம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 'செம்மொழியாம் தமிழ் மொழியாம்'... கடவுளே ! பிரதமர் யார் என கேட்டால் வருகிறது பதில் அப்துல்கலாம்  என்று. எங்க போய் முட்டிக்கிறது. 3 நாட்களுக்கு முன்னால் நில நடுக்கம் வந்தபோது என்ன செய்வது என்று மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரிய வில்லை. குறைந்த பட்சம் வகுப்பறையை விட்டு வெளியேறுவது,  மேசைக்கு கீழே மறைந்து கொள்வது என அடிப்படை  விசயங்களைக் கூட இந்த கல்வி முறை போதிக்க வில்லை.

குறைவான பாட திட்டங்களைக் கொண்ட இந்த சமசீர் கல்வியை பயிலும் நம் குழந்தைகள் கண்டிப்பாக தேசிய அளவில் மற்ற போட்டிகளுக்கு, மேல் படிப்பிற்கான தகுதி தேர்வுகளை எதிர் கொள்வார்களா என்பது பெரிய கேள்விக்குறி?!

Wednesday, April 13, 2011

அப்பாடா.. வோட்டுப் போட்டாச்சு. யோசிக்க வேண்டிய விஷயம்!!

இன்னைக்கு காலைல சீக்கிரம் ரெடியாகி 9 மணிக்குள்ளாக வோட்டும் போட்டு ஒரு ஜனநாயக கடமையாற்றி வந்தாச்சு. 

என்ன நீங்க எல்லாம் வோட்டுப் போட்டாச்சா?   

வீட்டுக்கு வந்து யோசிச்சு பாத்தா ஒரு விஷயம் புலப்பட்டுச்சு. இந்த 20 நாட்கள் அத்தனை அரசியல் கட்சிகளின் கண்களிலும் அனைத்து அரசுத் துறைகளிலும் விரலை விட்டு ஆட்டிய தேர்தல் ஆணையம் போன்ற ஒரு அதிகார அமைப்பு (கட்சி சாரா ) ஒன்று நிரந்தரமாக நமக்குத் தேவை. இப்படி ஒரு அமைப்பு இருக்கும் பட்சத்தில் அதற்க்கு அதிகாரங்கள் பரவலாக்கப்படும் பட்சத்தில், மணல் கொள்ளைகள், அரிசி கடத்தல், அரசு அலுவலக ஊழல்கள் இவை ஆனதும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் அல்லது வெகுவாக குறைந்து விடும். (குறிப்பு : குறைந்து விடும் அல்லது கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று தான் சொல்கிறேன். முற்றிலும் ஒழிந்து விடாது). அன்னா ஹசாரே  வலியுறித்திய ஊழலுக்கு எதிரான, அரசை தட்டி கேட்க்கக் கூடிய மக்கள் பிரதிநிதிகளுடன் கூடிய ஒரு அதிகார அமைப்பு கட்டாயம் நமக்கு தேவை.  அதற்காக நாம் குரல் எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.  

ஆனா இதற்க்கு ஒரு அரசியல் கட்சியும் சம்மதிக்காது. இங்க கேள்வி கேட்க ஆள் இருந்தா கருணாநிதி மாதிரி ஆளுங்க அய்யகோ, இங்கே எனது தலைமையில் ஆட்சி நடக்குதா இல்லையானே தெரியலை அப்படின்னு  நீலிக் கண்ணீர் விடுப்பார்கள். ஒரு இனமே அழிக்கப்பட்ட போதும், இமாலய ஊழல் நடந்த போதும் அத்தனை பேர் கூக்குரல் எழுப்பியும், நீ என்ன கூப்பாடு போட்டாலும் என் இஷ்டப்படிதான் நடப்பேன் என தெனாவெட்டாக, இல்லையில்லை... திமிராக பேசினார்களே இந்த ஈனங்கெட்ட அரசியல்வாதிகள். அவர்களுக்கு எதிராக நம்மால் அப்போதே ஒன்றும் செய்ய முடியவில்லை. 5 வருடங்களுக்கு ஒரு முறை வரும் தேர்தலுக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம்.. என்ன பொழப்புடா இது? 

ஒரு குடிமகன் சராசரியாக 9 முதல் 10 முறை தன் வாழ் நாளில் வாக்களிக்க முடியும். அவ்வளவுதானா  அவனுக்கு வாய்ப்பு? 

அதுவும் இந்த தேர்தல்கள் நம்மை பிச்சை காரர்களாக்கும் வேலையே தான் செய்கிறது.. வரைமுறை இல்லாத, தகுதியற்ற பிரச்சாரங்கள்... இவை நம்மை வேதனைப்பட வைக்கிறது.  ஏன் இவ்வளவு நடிகர்களை நாம் அரசியலில் வளர்த்திருக்கிறோம்?  எங்கிருந்து வந்தார்கள் இவர்கள் ??? எந்த போராட்டத்தில் சிறை சென்றவர்கள் இவர்கள்? காசை வாங்கி AC காரில் பயணம் செய்யும் இவங்களிடம் நம் வாழ்வை நடத்தும் உரிமையை அளிப்பதா?

அன்னா ஹசாரே வின் உறுதிக்கு கிடைத்த வெற்றி நமக்கு ஒரு வெளிச்சம் காட்டுகிறது.  நாம் நம் குரலை உயர்த்த வேண்டிய நேரம் இது ....

என்ன சொல்றீங்க நீங்க ?

Friday, April 8, 2011

அடே அப்பா டக்கர்களா.....

அடே அப்பா டக்கர்களா.....

விஜயகாந்த் குடிக்கிறாரு னு சொல்ற சன் , கலைஜர், ராமதாஸ், காமடி பீஸ் வடிவேலு  போன்ற பெரும் அரசியல் அர்ப்பனிப்பாளர்களே,

ஏண்டா, நீங்க தானேடா தமிழ் நாடு பூரா டாஸ்மாக் கொண்டாந்தீங்க...  ஊரெல்லாம் குடிக்க வச்சு அந்த காச வச்சு தானேடா ஆட்சி நடத்திறீங்க...

என்னவோ நீங்க எல்லாம் பெரிய அப்பா டக்கர் மாதிரியும் மத்தவங்க எல்லாம் அயோக்கியர்கள் போலவும் பேசறீங்களே..... மொதல்ல நீங்க ஒழுங்கா இருங்க .. அப்புறம்  அடுத்தவன் முதுகை பார்க்கலாம்.

நாளுக்கு நாள் சன், கலைஜர் குழுமங்களின் பொய்யான பரப்புரை அதிகரித்து வருவதால் அதற்க்கான ரசிகர்களின் ஆதரவை வெகுவாகவும் மிக வேகமாகவும் இழந்து  வருகின்றன..

ஏண்டா பணத்தை அள்ளி சாப்பிடுவீங்களோ?  இல்ல வேற எதாச்சும் சாப்பிடரீங்களோ ? 

Sunday, April 3, 2011

இன்னும் என்ன எல்லாம் இலவசங்கள் தர முடியும் ?

நாங்க எல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறவங்க... ..

தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு... எல்லாரும் இலவசங்களை வாரி வாரி  இரைக்கிறாங்க .. நாங்க மட்டும் சும்மாவா ?

குறிப்பு : கீழே குறிப்பிட்டவை எல்லாம் காப்பி  ரைட் வாங்க முயற்சி செய்யப் படுகிறது .. ஆமாம் யாரும் காப்பி  அடிச்சுடாதீங்க...

* இலவச இன்டர்நெட் கனக்சன் (வெறும் லேப்டாப் குடுத்தா போதுமா ?)
* வீட்டுக்கு ஒரு செல்போன் (2G உபயம் )
* எமர்ஜென்சி  லைட் (அடிக்கடி கரன்ட் கட் ஆகுதுல்ல... அதான் )
* ஏழை மக்களுக்காக அயர்ன் பாக்ஸ் 
* வீட்டுக்கு ஒரு ஜென் செட்
* 108 -i தொடர்ந்து    109  சேவை - வீட்டிற்கே டாக்டர் வந்து சிகிச்சை அளிப்பார்

* வீட்டுக்கு வீடு டன்... டனா... டன்... 
* அரசு ஊழியர்களுக்கு கார் வாங்க மானியம் !??


   குடி மகன்களுக்காக - 
* சரக்குக்கு ஊறுகாய் இலவசம் ....
* மாதம் முழுதும் சரக்கடிப்பவர்களுக்கு ஒரு  புல் இலவசம் ...
* ஒரு போன் செய்தால் போதும். வீட்டிற்கே சரக்கு டோர் டெலிவரி 

* மாணவர்களுக்கு டிபன் பாக்ஸ் & வாட்டர்  பாட்டில் 
* மாணவியர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்படும். அதுக்கு மாசா மாசாம்  
   மானியம் தரப்படும் (இது இள மகளிர் சுய உதவி  குழு.. எப்படி புது ஐடியா   )

எப்பூடி.... இந்த இலவசம் போதுமா ? இன்னும் கொஞ்சம் வேணுமா ?

Sunday, March 27, 2011

இலவச லேப்டாப் எப்படி இருக்கும் ?

சும்மா பொறி கடலை தற மாதிரி ஆளாளுக்கு லேப்டாப் தரேன்னு ரோட்ல போற வறவன் எல்லாம் அறிக்கை விடறான். ஒரு வேல எல்லாருமே மாணவர்களுக்கு தரேன்னு சொல்லி இப்படி ஒரு லேப்டாப் கொடுத்தா எப்படி இருக்கும் ? 
சும்மா ஒரு ஜாலி கற்பனை தான்...





மிக்சி , கிரைண்டர், பேன், லேப்டாப், ஆடு, மாடு, பணம், அரிசி, தாலி, தங்கம் - னு ஒவ் வொண்ணா தராம பேசாம தினமும் காலைல, சாயங்காலம்   டிபன், மதியம் சாப்பாடு இப்படி குடுத்தீங்கன்னா  .. நாங்க பாட்டுக்கு காலை நீட்டி படுத்துக் கிட்டு மானாட மயிலாட டிவி ல பார்த்துகிட்டு இருப்போம்... ஹி....ஹி... கொஞ்சம் கரண்ட் கொடுங்கப்பா....

(பின்னணியில் ஒரு பாட்டு கேட்கிறது ...எ..ஆர் ரஹ்மான் இசையில் ....)

செம்மொழியான தமிழ் மொழியாம்......
உழைத்து வாழ்ந்தோம், உழைத்து  வாழ்வோம்...


பின் குறிப்பு: ப்ளீஸ் யாராவது இந்த பாட்ட இப்போதைய சூழ்நிலைக்கு வரிகளை மாத்தி ரீமிக்ஸ் பண்ணுங்களேன்!