பக்கங்கள்

Thursday, February 28, 2008

பயணம்....

நாம் எல்லோரும், எப்போதும், எங்காவது எதோ ஒரு காரணத்திற்காக பயணப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் ஒவ்வொருவரின் பயணமும் அதற்கான காரணமும் வேறு வேறானவை. விருப்பப் பயணம், கட்டாயப் பயணம், திட்டமிடா பயணம், திட்டமிட்டும் திசை மாறிய பயணம் என பல்வேறு அனுபவங்கள் நம் எல்லாருக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால் நாம் எல்லா பயணங்களையும் சுகமாக அனுபவித்து இருக்கிறோமா என்றால் அது நிச்சயம் இல்லை என்பதே பதிலாக நம்மில் எல்லாரிடமும் இருக்கும்.
எனது பள்ளிப் பருவத்தில் பேருந்தில் பயணம் செய்வது எனக்கு ரொம்ப பிடித்தமானதாக இருந்தது. அதுவும் ஜன்னலோர இருக்கை கிடைக்கும் பட்சத்தில் அந்த பயணம் ரொம்ப அலாதியானது. அப்போதெல்லாம் சாலையோரம் நிறைய மரங்கள் இருக்கும். பயணக் களைப்பே தெரியாது. ஆனால் இன்றைய நிலைமை ரொம்பக் கொடுமை. அட ஒரு மரத்தைக் கூட கண்ணில் பார்க்க முடிவதில்லை. எல்லாம் வெட்டி சாய்க்கப் பட்டு விட்டது. வெயிலின் உஷ்ணம் வாகனம் முழுதும் நிரம்புகிறது. அப்போதெல்லாம் இரவு நேரப் பயணங்கள் ரொம்பவும் சுகமானது. பால் நிலா பேருந்தைப் பின் தொடர்ந்து வர மரங்கள் ஒவ்வொன்றாக கடக்கையில் மனதில் கவிதை ஊற்று எடுக்கும், இலகுவாகும். ஆனால் அதெல்லாம் இப்போது வெறும் கனவாகப் போய் விட்டது. நடந்து செல்பவனை இரு சக்கர வாகனத்தில் செல்பவன் மதிப்பதில்லை. இரு சக்கர வாகனத்தில் செல்பவனை எவனும் மதிப்பதில்லை. முக்கியமாக தண்ணீர் லாரி களும் , அரசுபேருந்துகளும் எதோ அவர்கள் ரோடு போலத்தான் செல்கிறார்கள். யம கிங்கிரர்களும் அவர்கள் தான்.
உங்களில் யாராவது பால் நிலா பின்னணியில், மரங்கள் கடக்க, வசந்த காலத்தில், இரவு நேரத்தில், சமீபத்தில் பேருந்தில் பயணம் செய்து இருக்கிறீர்களா?
-- இன்னும் எழுதுவோம் ல ........
Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

No comments: