பக்கங்கள்

Tuesday, March 18, 2008

மழைக் காலம்


இன்னும் மழை நிற்க்க வில்லை. அதுதான் மழைக் கவிதை தொடர்கிறது.

மழைக் காலங்களின்
மண் வாசனை எப்போதும்
மனதைக் கிறங்கடிக்கும்.

நனைந்து போன
சாலைகளின் ஒரங்களில்
புதுக்குடைகளாய் காளான்கள்
கம்பீரம் காட்டும்.

புல்வெளிகளின் புதிய
பச்சை நிறமும், பெயர் தெரியாத
காட்டுப் பூக்களின் நறுமணமும்
மனதை வருடும்.

எப்போதோ, யாராலோ
பயன்படுத்தப்பட்ட,
அனேகமாய் அடையாளம் இழந்த
ஒற்றையடிப் பாதைகள்
கவனம் ஈர்க்கும்.

கிளர்ச்சியடைந்த
காட்டுக்குயில்களின் கான இசை
இதயம் தொலைக்கும்.
புது நீர் தாங்கும்
குளங்கள் - அதில்
உயிர்களை நிரப்பும்.

ஆயிரம் அர்த்தம் சொல்லும்
அழகிய மழைக்காலமே! - உன்
ஒவ்வொரு வருகையிலும்
என் வயதைப் புதைத்து,
மனசைத் தொலைக்கிறேன்.

-- என் மனசு

Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

No comments: