பக்கங்கள்

Saturday, March 8, 2008

திருச்சி மலைக் கோட்டை

கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம், கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். ஆனால் நமது ஊரில் கோவில்களின் நிலை எப்படி இருக்கிறது? அதை நாம் எப்படி பரமரிக்கிறோம் என்றால், நம்மில் பலருடைய பதில் மௌனமே! நம்மில் பலர்
கோவில்களை அசுத்தப்படுதுவதைப் பற்றி துளியும் மனக்கிலேசம் கொள்வதில்லை. தூய்மையான கோவில்கள் மிக அரிதாகிப் போய் விட்டது. திருச்சியில் உள்ள ஐயப்பன் கோவில் தான் நான் பார்த்தவைகளில் மிக நல்ல முறையில் பராமரிக்கப் படுகிறது. நிறைய கோவில்களில் கரி மற்றும் எண்ணெய் கொண்டு அவரவருக்கு பிடித்த பெயர்களை, வாகன எண்களை கோவில் பிரகார சுவர்களில் கிறுக்கி சுவரை அசிங்கப் படுத்தி இருப்பார்கள். திருச்சி மலைக் கோட்டை கோவிலும் அதற்கு விதி விலக்கல்ல. கோவில் படி ஏறும்போது கோவில் வரலாறை விளக்கி வைக்கப் பட்ட டிஜிட்டல் பேனர் களில் ஒரு துளி டம் இல்லாமல் பேனாவால் கிறுக்கி வைக்கப் பட்டு வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளை மிகவும் முகம் சுளிக்க வைக்கிறது ( பார்க்க படம் ). மேலும், ஸ்ரீரங்கம் கோவிலை குப்பை கூளம்ஆக்கி விட்டார்கள். எங்கு பார்த்தாலும் குப்பைகள், பிளாஸ்டிக் பேப்பர் , எச்சில் இவைகளால் நிறைந்து இருக்கிறது. திருச்சியைப் பொறுத்த வரை மலைக் கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் கோவில்கள் தான்
வெளி நாட்டுப் பயணிகள் மிகவும் வந்து போகும் இடங்களில் ஒன்று மற்றும் நமது பாரம்பரிய சின்னங்களில் ஒன்று. அதை நமது தலைமுறை காப்பாற்ற வேண்டியது கடமை. புதியது செய்யாவிடினும் இருப்பதை அழிக்காமல் இருப்பது நலம். எப்போது அதை நாம் உணர்வது ????
Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

No comments: