பக்கங்கள்

Thursday, May 29, 2008

சுவையான கடிதம்......

வலைத்தளத்தில் கிடைத்த சுவையான கடிதம்........

Tuesday, May 27, 2008

கொறஞ்ச காசில மருத்துவம்.....

வணக்கமுங்க்னா, இப்ப நாம இருக்கிற நெலமையில, அந்த வலி, இந்த வலி னு அடிக்கடி Doctor கிட்ட போய் பணத்த தொலச்சிடறோம். அட இல்லனா அவிங்களே பிடுங்கிகிறாங்க. என்ன நாஞ் சொல்றது.... அட 50 பைசா ஹால்ஸ் முட்டாய் கணக்குக்கு 500 ரூவா பணத்த உருவிடுறாங்க. அட அதுக்குதான்னா இங்க ஒரு விசயத்தைசொல்லி புடலாம் னு வந்துருக்கிறேனுங்க. அட, கொஞ்சம் காத கொடுத்து தான் கேளுங்களேன்...

சாதரணமா ஒரு காய்ச்சல் , தலைவலி வந்தா நாமளே கடைல போய் எதோ ஒரு கருமத்த அட அதான் கடைக்காரனே தரான்ல அத வாங்கி சாப்பிடுறோம். அது கேட்குதா, இல்லையா ஒரு எளவும் தெரியறதில்ல. ஆனா, Side Effect வேணா நல்லா தெரியுது. கண்ட மருந்த வாங்கி காசைக் கரியாக்கிறதுக்கு பதிலா நான் ஒரு எளிமையான வழி சொல்ரேன் கேட்டுகுங்க்னா...- IMPCOPOS- னு (http://www.impcops.org/index.html) அரசு அமைப்பு இருக்கு. அதில எல்லா வகை சித்தா, ஆயுர்வேதா மருந்துகள் மிக குறைவான விலையில்

தராங்க. இந்த அமைப்புல பதிவு பண்ணின மருத்துவர்கள் நிறைய இருக்காங்க. இங்க வாங்குற மருந்தும் விலை குறைச்சல். அது மட்டுமில்ல... நல்லா கேட்க்கவும் செய்யுது. அதான் மேட்டரு... இதே மருந்த சில தொலைக்காட்சி புகழ் மூணு, நாலு மடங்கு அதிகம் வச்சி விக்குறாங்க. அதனால நான் இன்னா சொல்ரேன்னா... சொம்மா... சொம்மா... மருந்து வாங்காம உருப்படியா IMCOPS பதிவு செஞ்ச டாக்டர பார்த்து அருமையான மருந்த கொறஞ்ச வெலயில வாங்கி சாப்பிட்டு உடம்ப தேத்து.. இந்த (http://www.impcops.org/index.html )வெப் சைட் ல எல்லா தகவலும் இருக்கு.


Friday, May 23, 2008

நெல்லையப்பர்...






திருநெல்வேலிக்கு அலுவல் நிமித்தம் சென்றபோது புகழ் வாய்ந்த நெல்லையப்பர் கோவிலை எப்படியும் காண விரும்பி நானும் என் நண்பரும் இரு சக்கர வாகனத்தில் ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை கிளம்பினோம். ஏனோ தெரியவில்லை... திருநெல்வேலி பிடித்த ஊராகி விட்டது. கோவில் செல்லும் வழி ரம்மியமாக இருந்தது. ஏற்கனவே, திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி பக்கம் எல்லாம் கோவில்களை பார்த்து ரசித்து (சாமியும் கும்பிட்டேனுங்க்னா) இருந்த படியால் கோவிலின் அழகை மிகவும் ரசித்தேன். அதன் பிரம்மாண்டம் மிக அழகு. மிகவும் பழமை வாய்ந்த கோவில் என்பதும் இதன் சிறப்பு ( சுமார் 1500 வருடங்கள் பழமை வாய்ந்தது). இங்கு இறைவன் சுயம்பு வடிவானவர். எனக்கு ஒரு பழக்கம். இது போல பழைய புகழ் பெற்ற ஸ்தலங்களுக்கு சென்றால் அதன் வரலாற்றை கேட்டு விடுவது வழக்கம். அங்கு இருந்த அர்ச்சகரிடம் கேட்ட போது அழகாக சொன்னார். ஒரு காலத்தில் அரண்மனைக்கு பால் கொண்டு செல்லும்போது இந்த ஸ்தலம் இருந்த இடத்தில் மூங்கில் மரங்கள் நிறைந்து இருந்த போது அந்த வழியே செல்லும் இடையர்கள் வைத்திருந்த மண் பானையில் பால் குறிப்பிட்ட இடத்தில் வழக்கமாக சிந்தியது. தினமும் பால் குறைவதைக் கண்ட மன்னன் அதற்கான காரணத்தைக் கண்டு அந்த மூங்கில் மரத்தை வெட்ட உத்தரவிட்டான். அதை வெட்டும்போது மரத்திலிருந்து ரத்தம் கொட்டியது. அங்கு மன்னன் வந்து அந்த அதிசயத்தைக் காணும் போது இறைவன் சுயம்புவாக தோன்றி மன்னனுக்கு காட்சி அளித்தான். மூங்கில் மரத்தை வெட்டியதால் ஏற்ப்பட்ட சேதம் காரணமாக சுயம்பு லிங்கத்தில் ஒரு பகுதி சேதத்துடன் காணப் படுகிறது. அங்கு கோவில் எழுப்பி இறைவழிபாடு நடத்தினான் மன்னன்.
சரி, திருநெல்வேலி என பேர் வந்தது எப்படி தெரியுமா????

அந்த இறைவனுக்கு அந்தனர் ஒருவர் தினசரி நெல்லை கொண்டு அமுது படைத்து இறை வழிபாடு நடத்தி வந்தார். ஒரு நாள் ஈர நெல்லை காய வைத்து விட்டு தாமிர பரணி ஆற்றில் குளித்து விட்டு வர சென்றார். அப்போது திடீரென மழை வந்து விட்டது. அந்தனர் ஐயோ, இறைவனுக்கு இன்று அமுது படைத்து வழிபட முடியாமல் போய் விடுமோ என்று அலறி அடித்து கோவிலுக்கு ஓடினார். அங்கு என்ன நடந்தது தெரியுமா? காய்ந்து கொண்டிருந்த நெல் இருந்த இடத்தில் நன்கு வெயில் அடித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் மழை பெய்து கொண்டிருந்தது. நெல்நனையாமல் வேலி அமைத்து காத்த படியால் இறைவனுக்கு நெல் வேலி காத்தவர் என்றுபெயர் வந்தது. அதனுடன் திரு என்ற அடைமொழி சேர்ந்து திருநெல்வேலி என்று ஆயிற்று.
ஸ்ஸ்ஸ் அப்பாடி மூச்சு வாங்குது... நல்ல கலைஅம்சங்களுடன் கோவில் விரிந்து கிடக்கிறது. அங்கு காந்திமதி அம்பாள் சன்னதியும் இருக்கிறது. அதைப் பற்றி அங்கிருந்த அர்ச்சகரிடம் கேட்டபோது ஒரே வரியில் சொல்லி விட்டார் .... என்ன தெரியுமா ??? நெல்லையப்பர் - சுயம்பு வடிவம் . காந்திமதி அம்பாள் - சக்தி வடிவம். மேற்கொண்டு எதையும் சொல்ல விரும்பாமல் அவர் முடித்துக் கொண்டார். எல்லாரும் காண வேண்டிய கோயில் .....

யோசிக்க வேண்டிய நேரம்....

நமது வேலைக்கு இடையே நம்மை ரிலாக்ஸ் செய்ய நாம் என்ன செய்கிறோம்? யோசித்துப் பார்த்தால் இசை, திரைப்படம், கேம்ஸ் இவைகளைத் தாண்டி வேறு என்ன செய்கிறோம் என்றால் கிடைக்கும் பதில்அனேகமாக ஒன்றுமே இருக்காது. அதுவும் நகர வாழ்வில் நாம் டிஸ்கோதே, பார்ட்டி தவிர வேறு எதை பற்றியும் நினைப்பதே இல்லை.


இயற்க்கையை தரிசிக்க வருஷம் ஒருமுறை (Tour) நினைக்கிறோம். சிலருக்கு மட்டுமே அது முடிகிறது. அட நமது வீட்டின் மாடியில் நின்று கொண்டு பால் நிலவை ரசிக்க கூட நேரம் இல்லாமல் தொலைக்காட்சிகளில் மூழ்கி கிடக்கிறோம். சிறு பிள்ளைகள் கூட அவர்களுக்கேயான குறும்புகளை தொலைத்து விட்டு பெரிய மனிதர்கள் போல நடக்க நினைக்கிறார்கள். சூழ்நிலை அவர்களையும் விட்டு வைக்க வில்லை. அல்லது நாமே அது மாதிரியான சூழலை உருவாக்கி விட்டோம். Digital Experience என்று சொல்கிறோமே அதே போல நமது வாழ்வும் Digital Life ஆக மாறி விட்டது. TV & Media வின் ஆதிக்கம் நம் மேல் பலமாக திரை போல விழுந்து இருக்கிறது. நமது அடுத்த தலை முறை எங்கே செல்கிறது. அதை நாம் எங்கே அழைத்து செல்லப் போகிறோம் ?

இது யோசிக்க வேண்டிய நேரம். யோசியுங்கள்....

Tuesday, May 13, 2008

HCL Mileap Ultra Portable Leaptops!

HCL -ன் புதிய MiLeap Model Laptops ...

HCL நிறுவனம் புதிய தயாரிப்பாக MiLeap Series - Ultra Portable Laptop - கணினிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இவைகள் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ருபாய் 16,990/- முதல் இவ்வகை மடி கணினிகள் கிடைக்கின்றன. 31,990/- என மதிப்பிடுள்ள மற்றொரு model-ல் அனைத்து சிறப்பம்சங்களும் உள்ளன. Intel Processor / Intel 945GU Chipset / 1GB DDR2/80GB HDD/ 1.3MP Camera / INTEGRATED Bluetooth & Wi-fi/ 7" Touch screen with swivel type screen உடன் வரும் இந்த மாடல் உடைய எடை எவ்வளவு தெரியுமா ? வெறும் 980Gram மட்டுமே. மாணவர்கள், Insurance Agents, அலுவலகம் செல்பவர்கள், அடிக்கடி பிரயாணம் செல்பவர்களுக்கு மிகவும் ஏற்ற Model. --- என் மனசு.

Monday, May 12, 2008

பென் ஹர் --- ஹாலிவுட் அலசல்




சமீபத்தில் பென் ஹர் (BEN-HUR) படம் பார்க்க நேர்ந்தது. தமிழ் மொழி மாற்று படம் என்பதால் மிகவும் ரசிக்க முடிந்தது. இரு நண்பர்களுக்கு இடையேயான நட்பையும், துரோகத்தையும் அழகாக வெளிக் காட்டுகிறது இப்படம். இயேசு கிறிஸ்து பிறப்பும், இறப்பும் படத்தின் ஆரம்பமும், முடிவுமாக காண்பிக்கப்படுகிறது. என்றாலும், இது நண்பர்களை பற்றியும் அவர் குடும்பத்தைப் பற்றியும் சுழன்று வருகிறது கதை. பழங்கால வாழ்வின் சிரமத்தையும், அடிமை வாழ்வையும் அழகாக காண்பிக்கிறது இப்படம். பென் ஹர் தான் இப்படத்தில் நாயகன். அவருடைய காதலியாக நடித்தவர் நடிப்பில் தூள் கிளப்பி உள்ளார். -- பார்க்க வேண்டிய படம்.

Saturday, May 10, 2008

ஸ்ரீரங்கநாதர்...


ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில்

புகழ் பெற்ற வைணவ தலமான ஸ்ரீரங்கம் ( Srirangam) ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் திருச்சி நகரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஸ்ரீ ரங்கம் கோயில் விமானமானது திருப்பாற்கடலின்று தோன்றியது. இதை நெடுங்காலமாக பூசித்து வந்த பிரம்மதேவன் திருவரங்கநாதருக்கு நித்திய பூசை புரிந்து வரும்படிசூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான இராமபிரான் அயோத்தியில் வழிபட்டு வருகிறார். தனது முடிசூட்டு விழாவினைக் காண வந்த விபீஷணனுக்கு தான் பூஜித்து வந்த இவ்விமானத்தை அளித்தார்.

அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் விபீஷணன் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்து விட்டு திரும்ப எடுக்கும் போது தரையை விட்டு வரவில்லை. அது கண்டு கலங்கிய விபீஷணனை அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான்.அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார்.விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர் தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதி அளித்தார்.பின்னர் தர்மவர்ம சோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டான்.அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்து போக தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிøல் சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.