பக்கங்கள்

Sunday, May 11, 2014

முட்டம் கடற்கரை ... (Muttam Beach)

அலைகள் ஓய்வதில்லை, கடலோர கவிதைகள் உள்பட பல்வேறு தமிழ் சினிமாக்கள் படம்பிடித்துக் காட்டியுள்ள இடம் முட்டம் கடற்கரை..

தமிழகத்தின் அழகிய கடற்கரை என்றால், அதில் முதல் இடத்தை முட்டம் கடற்கரைதான் பிடிக்கும். பாறைகள் நிறைந்து காணப்படும் தமிகத்தின் கடற்கரைகளில் இதற்கு தான் முதலிடம். இந்த கடற்கரைக்கு வடமேற்கில் செம்மண் அகழிகளும் உள்ளன. இதுபோன்ற பாங்கை வேறு எங்கும் பார்க்க இயலாது.

கடற்கரை என்றாலே நீண்ட மணற் பரப்பை மட்டுமே அறிந்திருக்கும் மக்களுக்கு இந்த பகுதி ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

பாறைப் பகுதிக்கும், கடற்பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில் கடற்கரை. எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். பாறைப் பகுதிகளில் கூட தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சற்று அபாயமான கடற்பரப்பு என்றும் கூறலாம்.இங்கு மெரினாவில் செய்வது போல குளியல் எல்லாம் செய்ய இயலாது. கடற்கரை காற்றில் மிதந்தவாறு நன்றாக ஓடியாடி விளையாடலாம்..



 

Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

No comments: