பக்கங்கள்

Monday, March 31, 2008

ஆரோக்கிய அட்வைஸ்..

அட்வைஸ் பண்றது ரொம்ப ஈஸி.... அதான் கொஞ்சம் நம்ம தமிழ் வலைப் பூக்கள் வாசகர்களுக்காக ஆரோக்கிய அட்வைஸ்..
WATER THEROPHY
நிறைய தண்ணீர் அருந்துவது அரோக்கியமானது என்று நாம் கேட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம். ஆனால் சரியான முறையில் தண்ணீர் அருந்தாவிட்டால் அப்படியே எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்தும். சரி, எப்படித்தான் குடிக்கலாம்? காலை எழுந்தவுடன், முதல் ஆகாரம் தண்ணீர்தான். முதலில் ஒரு வாரத்திற்க்கு ஒரு தம்ளர் மட்டும் குடிக்கவேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீரின் அளவை அதிகரிக்க வேண்டும்.
இதனால் என்ன பயன் தெரியுமா? வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் சரியாகும். மலச்சிக்கல் தீரும். வயிற்று வலி, வாயுத்தொல்லை, உடல் உஷ்ணம் இவை எல்லாம் சரியாகும். (லேகியம் விற்பவன் போல மாறி விட்டான் என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்க்கிறது) சரி வேறு எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும்? உணவு உண்ணும் முன்பு கால் டம்ளர் மட்டும் (வயிற்றை நனைக்க) குடிக்கவும். பிறகு சாப்பிட்ட பின்புதான் மீண்டும் நீர் குடிக்க வேண்டும். ஒரு நாளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒரு டம்ளர் வீதம் அதிக பட்சம் 2-3 லிட்டர் வரை குடிக்கலாம். எப்பவுமே நம்ம ஆட்கள் கொஞ்சம் ஒவர் புத்திசாலி... சில பேர், ஒரே தடவையில் ஒரு லிட்டர் வரை குடிக்க முயல்வார்கள்.இதானால் கோமா ஸ்டேஜ் வரை கூட போக வாய்ப்புண்டு. எனவே சரியான அளவில் தண்ணீர் (அந்த தண்ணீ இல்லை) அருந்தி ஆரோக்கியமாக வாழுங்கள்.
Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

No comments: