பக்கங்கள்

Wednesday, October 21, 2009

அட தமிழர்களே ! இதிலாவது ஒன்று படுங்கள்!!!!

சீனப் பொருள்களை வாங்குவோரே ! இலங்கைப் பொருள்களை வாங்குவோரே !!

இன்னமுமா விழித்துக் கொள்ள வில்லை? இனி இந்த எதிரிகளின் மீது நமது பொருளாதார தடையைத் துவக்குவோம். இந்த நாடுகளின் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் இதை அமல் செய்வோம். நம்மை , தமிழர்களை இழிவு செய்யும் இவர்களை நாம் தள்ளி வைப்போம். முதுகெலும்பு என்று ஒன்று நம்மிடம் இருக்குமானால், பழைய தலைமுறையினரின் வீரம் நம்மிடம் மிச்சம் இருக்குமானால், நம்மை இளிச்சவாயர்கள் என என்னும் ராஜபட்செவையும், கோதபயவையும் மௌனமான பொருளாதாரப் புரட்சியால் மூழ்கடிப்போம்.

அட தமிழர்களே ! இதிலாவது ஒன்று படுங்கள்!!!!!!

Saturday, February 7, 2009

போர் நிறுத்தம் காண ஒரே வழி....

வெறும் வார்த்தை ஜாலங்களாலும், அறிக்கைகளாலும் ஈழப் பிரச்சினையை கையில் எடுத்து அரசியல் நடத்தும் தலைவர்களே !
தமிழன் ஒவ்வொருவனின் வேட்டியும் , கோவணமும் ஒவ்வொன்றாக பறிபோய் கொண்டிருக்கிறது . வெறும் வாய் சவடல்களும், வெத்து அறிக்கைகளும் ஈழத் தமிழர்களின் வாழ்வை வளம்பெற வைக்காது. முன்னாள் , இந்நாள் முதல்வர்களை இலங்கை வர ராஜபக்ட்சே விடுத்த அறிவிப்புக்கு இரு தலைவர்களும் காரணங்கள் கூறி தப்பித்து விட்டனர்.
ஆனால் இரு தலைவர்களும் நேரில் இலங்கை சென்று ராஜ பட்சே போர் நிறுத்தம் செய்யும் வரை அங்கு உண்ணாவிரதம் இருந்து இருப்பார்களே ஆனால் இன்று கதையே வேறு. ஆனால் இவர்கள் பொதுக்குழு , செயற்குழு என்று குழுக்களை கூட்டுவதேற்கே மாதங்கள் ஆகின்றன. ஆனால் அறிக்கைகள் என்னவோ ரத்த சாயம் பூசித்தான் இருக்கும்.

போர் நிறுத்தம் காண, மத்திய அரசால் முடியாது ... ஆனால் காங்கிரஸ் காரர்கள் அதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். டாங்கிகளும், ஆயுதங்களும் தமிழகம் வழியாகவே செல்லும் சிங்களர்களுக்கு. நாமும் வேண்டுகோள் விட்டே நாட்களை கடத்தி விடுவோம். ஆட்சியை பற்றி பயப்படுபவர்கள், என்னால் தான் நல்லது செய்ய முடியும் என அறிக்கை விடுவதை விட்டு விடுங்கள். யாரை ஏமாற்ற இவை எல்லாம்.

போர் நிறுத்தம் காண ஒரே வழி என்னவென்றால்....
அனைத்து கட்சி தலைவர்களும் ராஜபட்சே அழைத்ததன் பேரில் சென்றுஅங்கு பேச்சு நடத்தி, ஒரு முடிவுக்கு வரும் வரை அங்கேயே இருந்து வேண்டுமானால் இலங்கை நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதம் இருந்து ஈழ மக்களை காப்பாற்றுங்கள். அப்படி நீங்கள் செய்தீர்களானால் இது உலகம் முழுதும் கவனம் ஈர்க்கும். கண்டனங்கள் பெரிதாகும்.. உலகளாவிய ஆதரவும் கிட்டும். அதை விடுத்து இப்படியே அறிக்கை விட்டால் , கடைசியில் அறிக்கை மட்டும் மிஞ்சும். ஈழம் ரத்தத்தில் கரைந்திருக்கும்.

எல்லாவற்றிற்கும் ஒரு கால அவகாசம் வேண்டும். பரீட்சை கூட மூன்று மணி நேரம் தான். எனவே உடனே யோசியுங்கள்... முடிவெடுங்கள் ... செயல்படுத்துங்கள் .... ( நன்றே செய் , அதை இன்றே செய் )

Saturday, January 3, 2009

COST CUTTING - சில TIPS.....

ஷாப்பிங் போவதற்கு முன் வீட்டிலேயே தேவையான பொருட்களின் பட்டியலை தயாரியுங்கள்.....
தேவையில்லாத பொருள்களை வாங்கக் கூடாது என்ற மன உறுதியுடன் செல்லுங்கள் .......
முடிந்தால் மனைவியை அழைத்துச் செல்லாமல் தவிருங்கள் ...
இந்த கால கட்டங்களில் லோன் வாங்குவதை தவிருங்கள் ....
தேவையில்லாத கார் பயணத்தை குறைத்து இரு சக்கர வாகனம் உபயோகியுங்கள் ....
மொபைல் போன் உபயோகத்தை குறையுங்கள் ....
அடிக்கடி மொபைல் போன் மாடல் மாற்றுவதை தவிருங்கள் .....
பார்ட்டி , ஹோட்டல் இவற்றை கூடுமானவரை தவிருங்கள்
சிறு சேமிப்பு அவசியம் என்பதால் கட்டாயம் சேமியுங்கள் ......
மெடிக்ளைம் பாலிசி அவசியம் உங்கள் குடும்பத்துக்கு எடுங்கள் ...
தேவையில்லாமல் வீட்டில் மின் சாதனங்களை இயக்காதீர்கள் .....



பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வாரா ???

பிரணாப் முகர்ஜி இனி எப்போது தான் போர் நிறுத்தம் பேச இலங்கைசெல்வார் ?????

எல்லாரும் செத்த பின்பா ????

திமுக தலைவர்கள் டெல்லி சென்று பிரதமரிடம் கோரிக்கை மனு கொடுத்து அந்த மனு கூட மண்ணோடு மன்னாக மட்கிப் போய்கிடக்கும்.

ஆனாலும் இந்த பிரணாப் முகர்ஜியை டெல்லி அனுப்ப மன்மோகன் சிங்கும் , சோனியாவும் ரொம்ப ரொம்ப யோசிக்கிறார்கள்

தமிழன் என்றால் எல்லாருக்கும் இளக்காரம் தானா ??? இல்லை நாம் தான் இளிச்ச வாயர்களா ????

இலங்கை பொருள்களை வாங்காதீர்!!!

பல் பொருள் அங்காடி வாடிக்கையாளர்களே !!!!

சத்தமில்லாமல் இலங்கை நாட்டு இறக்குமதிப் பொருள்களை விற்கும் பல் பொருள் அங்காடிகளில் தயவு செய்து இலங்கை பொருள்களை வாங்காமல் புறக்கணியுங்கள். குறிப்பாக பிஸ்கட், சாக்லேட் பொருள்களை இலங்கை நாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள்.

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தெரிவியுங்கள்.......