பக்கங்கள்

Sunday, August 14, 2011

புட்டபர்த்திக்கு பிறகு மேல்மருவத்தூரும் ???????

செய்திகளில் பார்த்திருப்பீர்கள்... சாய்பாபாவுக்குப் பிறகு புட்டபர்த்தி  வெறிச்சோடிப் போய்விட்டது. அங்கு எல்லாத் தொழிலும் முடங்கி விட்டது. வாழ்க்கை நடத்துவதே சிரமம் ஆகி விட்ட புட்டபர்த்தி இன்னும் சில மாதங்களில் கை விடப்பட்ட ஊராகி விடும். சாய்பாபா யாரையும் தனது வாரிசாக அறிவிக்காத நிலையில் புட்டபர்த்தியின்  மொத்த பொருளாதாரமும் முடங்கி விட்டது.  
சரி.. என்ன நடக்கிறது மேல் மருவத்தூரில்?
மேல்மருவத்தூர் 'அம்மாவின்' தொழில் நகரம். அவரது பள்ளிகள் கல்லூரிகளால் ஊரே நிறைந்துள்ளது. ரியல் எஸ்டேட் உட்பட அனைத்தும் கோவில் மற்றும் அம்மா இவர்களை சார்ந்தே உள்ளது.  இவரும் தனது வாரிசை அறிவிக்காத நிலையில் ஊரின் எதிர்காலம் புட்டபர்த்தியை  எண்ணிப் பார்க்க செய்கிறது. நீங்கள் ஏதும் அங்கே சொத்து வாங்கி உள்ளீர்களா? வாங்கப் போகிறீர்களா?? கவனமப்பா... கவனம்....

சமச்சீர் கல்வியா? தரமான கல்வியா?

இதெல்லாம் ஒரு  தரமான  கல்வியா  என்று சொல்கிற வகையில் நம் கல்வித்தரம் இப்போது இருக்கிறது. வாழ்க்கைக் கல்வியை இவை நம் தலை முறைகளுக்கு சொல்லித் தரவில்லை. தினமும் இரவு 9 மணிக்கு  மக்கள் டிவி இல் ஒளிபரப்பாகும் 'கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை' பார்பவர்களுக்குத் தெரியும் நம் குழந்தைகளின் பொது அறிவு எப்படி இருக்கிறது என்று. பத்தாவது படிக்கும் பெண் சொல்கிறாள் நம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 'செம்மொழியாம் தமிழ் மொழியாம்'... கடவுளே ! பிரதமர் யார் என கேட்டால் வருகிறது பதில் அப்துல்கலாம்  என்று. எங்க போய் முட்டிக்கிறது. 3 நாட்களுக்கு முன்னால் நில நடுக்கம் வந்தபோது என்ன செய்வது என்று மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரிய வில்லை. குறைந்த பட்சம் வகுப்பறையை விட்டு வெளியேறுவது,  மேசைக்கு கீழே மறைந்து கொள்வது என அடிப்படை  விசயங்களைக் கூட இந்த கல்வி முறை போதிக்க வில்லை.

குறைவான பாட திட்டங்களைக் கொண்ட இந்த சமசீர் கல்வியை பயிலும் நம் குழந்தைகள் கண்டிப்பாக தேசிய அளவில் மற்ற போட்டிகளுக்கு, மேல் படிப்பிற்கான தகுதி தேர்வுகளை எதிர் கொள்வார்களா என்பது பெரிய கேள்விக்குறி?!

Wednesday, April 13, 2011

அப்பாடா.. வோட்டுப் போட்டாச்சு. யோசிக்க வேண்டிய விஷயம்!!

இன்னைக்கு காலைல சீக்கிரம் ரெடியாகி 9 மணிக்குள்ளாக வோட்டும் போட்டு ஒரு ஜனநாயக கடமையாற்றி வந்தாச்சு. 

என்ன நீங்க எல்லாம் வோட்டுப் போட்டாச்சா?   

வீட்டுக்கு வந்து யோசிச்சு பாத்தா ஒரு விஷயம் புலப்பட்டுச்சு. இந்த 20 நாட்கள் அத்தனை அரசியல் கட்சிகளின் கண்களிலும் அனைத்து அரசுத் துறைகளிலும் விரலை விட்டு ஆட்டிய தேர்தல் ஆணையம் போன்ற ஒரு அதிகார அமைப்பு (கட்சி சாரா ) ஒன்று நிரந்தரமாக நமக்குத் தேவை. இப்படி ஒரு அமைப்பு இருக்கும் பட்சத்தில் அதற்க்கு அதிகாரங்கள் பரவலாக்கப்படும் பட்சத்தில், மணல் கொள்ளைகள், அரிசி கடத்தல், அரசு அலுவலக ஊழல்கள் இவை ஆனதும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் அல்லது வெகுவாக குறைந்து விடும். (குறிப்பு : குறைந்து விடும் அல்லது கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று தான் சொல்கிறேன். முற்றிலும் ஒழிந்து விடாது). அன்னா ஹசாரே  வலியுறித்திய ஊழலுக்கு எதிரான, அரசை தட்டி கேட்க்கக் கூடிய மக்கள் பிரதிநிதிகளுடன் கூடிய ஒரு அதிகார அமைப்பு கட்டாயம் நமக்கு தேவை.  அதற்காக நாம் குரல் எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.  

ஆனா இதற்க்கு ஒரு அரசியல் கட்சியும் சம்மதிக்காது. இங்க கேள்வி கேட்க ஆள் இருந்தா கருணாநிதி மாதிரி ஆளுங்க அய்யகோ, இங்கே எனது தலைமையில் ஆட்சி நடக்குதா இல்லையானே தெரியலை அப்படின்னு  நீலிக் கண்ணீர் விடுப்பார்கள். ஒரு இனமே அழிக்கப்பட்ட போதும், இமாலய ஊழல் நடந்த போதும் அத்தனை பேர் கூக்குரல் எழுப்பியும், நீ என்ன கூப்பாடு போட்டாலும் என் இஷ்டப்படிதான் நடப்பேன் என தெனாவெட்டாக, இல்லையில்லை... திமிராக பேசினார்களே இந்த ஈனங்கெட்ட அரசியல்வாதிகள். அவர்களுக்கு எதிராக நம்மால் அப்போதே ஒன்றும் செய்ய முடியவில்லை. 5 வருடங்களுக்கு ஒரு முறை வரும் தேர்தலுக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம்.. என்ன பொழப்புடா இது? 

ஒரு குடிமகன் சராசரியாக 9 முதல் 10 முறை தன் வாழ் நாளில் வாக்களிக்க முடியும். அவ்வளவுதானா  அவனுக்கு வாய்ப்பு? 

அதுவும் இந்த தேர்தல்கள் நம்மை பிச்சை காரர்களாக்கும் வேலையே தான் செய்கிறது.. வரைமுறை இல்லாத, தகுதியற்ற பிரச்சாரங்கள்... இவை நம்மை வேதனைப்பட வைக்கிறது.  ஏன் இவ்வளவு நடிகர்களை நாம் அரசியலில் வளர்த்திருக்கிறோம்?  எங்கிருந்து வந்தார்கள் இவர்கள் ??? எந்த போராட்டத்தில் சிறை சென்றவர்கள் இவர்கள்? காசை வாங்கி AC காரில் பயணம் செய்யும் இவங்களிடம் நம் வாழ்வை நடத்தும் உரிமையை அளிப்பதா?

அன்னா ஹசாரே வின் உறுதிக்கு கிடைத்த வெற்றி நமக்கு ஒரு வெளிச்சம் காட்டுகிறது.  நாம் நம் குரலை உயர்த்த வேண்டிய நேரம் இது ....

என்ன சொல்றீங்க நீங்க ?

Friday, April 8, 2011

அடே அப்பா டக்கர்களா.....

அடே அப்பா டக்கர்களா.....

விஜயகாந்த் குடிக்கிறாரு னு சொல்ற சன் , கலைஜர், ராமதாஸ், காமடி பீஸ் வடிவேலு  போன்ற பெரும் அரசியல் அர்ப்பனிப்பாளர்களே,

ஏண்டா, நீங்க தானேடா தமிழ் நாடு பூரா டாஸ்மாக் கொண்டாந்தீங்க...  ஊரெல்லாம் குடிக்க வச்சு அந்த காச வச்சு தானேடா ஆட்சி நடத்திறீங்க...

என்னவோ நீங்க எல்லாம் பெரிய அப்பா டக்கர் மாதிரியும் மத்தவங்க எல்லாம் அயோக்கியர்கள் போலவும் பேசறீங்களே..... மொதல்ல நீங்க ஒழுங்கா இருங்க .. அப்புறம்  அடுத்தவன் முதுகை பார்க்கலாம்.

நாளுக்கு நாள் சன், கலைஜர் குழுமங்களின் பொய்யான பரப்புரை அதிகரித்து வருவதால் அதற்க்கான ரசிகர்களின் ஆதரவை வெகுவாகவும் மிக வேகமாகவும் இழந்து  வருகின்றன..

ஏண்டா பணத்தை அள்ளி சாப்பிடுவீங்களோ?  இல்ல வேற எதாச்சும் சாப்பிடரீங்களோ ? 

Sunday, April 3, 2011

இன்னும் என்ன எல்லாம் இலவசங்கள் தர முடியும் ?

நாங்க எல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறவங்க... ..

தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு... எல்லாரும் இலவசங்களை வாரி வாரி  இரைக்கிறாங்க .. நாங்க மட்டும் சும்மாவா ?

குறிப்பு : கீழே குறிப்பிட்டவை எல்லாம் காப்பி  ரைட் வாங்க முயற்சி செய்யப் படுகிறது .. ஆமாம் யாரும் காப்பி  அடிச்சுடாதீங்க...

* இலவச இன்டர்நெட் கனக்சன் (வெறும் லேப்டாப் குடுத்தா போதுமா ?)
* வீட்டுக்கு ஒரு செல்போன் (2G உபயம் )
* எமர்ஜென்சி  லைட் (அடிக்கடி கரன்ட் கட் ஆகுதுல்ல... அதான் )
* ஏழை மக்களுக்காக அயர்ன் பாக்ஸ் 
* வீட்டுக்கு ஒரு ஜென் செட்
* 108 -i தொடர்ந்து    109  சேவை - வீட்டிற்கே டாக்டர் வந்து சிகிச்சை அளிப்பார்

* வீட்டுக்கு வீடு டன்... டனா... டன்... 
* அரசு ஊழியர்களுக்கு கார் வாங்க மானியம் !??


   குடி மகன்களுக்காக - 
* சரக்குக்கு ஊறுகாய் இலவசம் ....
* மாதம் முழுதும் சரக்கடிப்பவர்களுக்கு ஒரு  புல் இலவசம் ...
* ஒரு போன் செய்தால் போதும். வீட்டிற்கே சரக்கு டோர் டெலிவரி 

* மாணவர்களுக்கு டிபன் பாக்ஸ் & வாட்டர்  பாட்டில் 
* மாணவியர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்படும். அதுக்கு மாசா மாசாம்  
   மானியம் தரப்படும் (இது இள மகளிர் சுய உதவி  குழு.. எப்படி புது ஐடியா   )

எப்பூடி.... இந்த இலவசம் போதுமா ? இன்னும் கொஞ்சம் வேணுமா ?

Sunday, March 27, 2011

இலவச லேப்டாப் எப்படி இருக்கும் ?

சும்மா பொறி கடலை தற மாதிரி ஆளாளுக்கு லேப்டாப் தரேன்னு ரோட்ல போற வறவன் எல்லாம் அறிக்கை விடறான். ஒரு வேல எல்லாருமே மாணவர்களுக்கு தரேன்னு சொல்லி இப்படி ஒரு லேப்டாப் கொடுத்தா எப்படி இருக்கும் ? 
சும்மா ஒரு ஜாலி கற்பனை தான்...





மிக்சி , கிரைண்டர், பேன், லேப்டாப், ஆடு, மாடு, பணம், அரிசி, தாலி, தங்கம் - னு ஒவ் வொண்ணா தராம பேசாம தினமும் காலைல, சாயங்காலம்   டிபன், மதியம் சாப்பாடு இப்படி குடுத்தீங்கன்னா  .. நாங்க பாட்டுக்கு காலை நீட்டி படுத்துக் கிட்டு மானாட மயிலாட டிவி ல பார்த்துகிட்டு இருப்போம்... ஹி....ஹி... கொஞ்சம் கரண்ட் கொடுங்கப்பா....

(பின்னணியில் ஒரு பாட்டு கேட்கிறது ...எ..ஆர் ரஹ்மான் இசையில் ....)

செம்மொழியான தமிழ் மொழியாம்......
உழைத்து வாழ்ந்தோம், உழைத்து  வாழ்வோம்...


பின் குறிப்பு: ப்ளீஸ் யாராவது இந்த பாட்ட இப்போதைய சூழ்நிலைக்கு வரிகளை மாத்தி ரீமிக்ஸ் பண்ணுங்களேன்!  

Sunday, March 6, 2011

பார்த்து ரசிக்க வேண்டிய எலெக்சன் காமெடி.....

"MUST WATCH CLIPPINGS"  பார்த்து ரசிக்க வேண்டிய காமெடி......எலெக்சன்  காமெடி.. 



கலைஞரின் கடைசி நேர ஸ்டன்ட் என்னவாக இருக்கும் ?

அய்யா கருணாநிதி....

காங்கிரஸ் 3 சீட்டு கூட கேட்டபோது, வழக்கம்போல  கடிதம் எழுதாம, நானே கேள்வி - நானே பதில்கள் போடாம, அவசர அவசரமாக உயர்நிலை குழு கூடி கூட்டணி முறிவு என அறிவித்தீர்களே, இதுவே இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோது நான் என்ன செய்ய முடியும் என்று அமைதி காத்தீர்கள் ???? தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போது வெறும் வெற்று அறிக்கை மட்டும் விட முடிந்தது ???

தான், தன் குடும்பம் என்பவர்கள் மட்டுமே இப்படி ஒரு நிலைபாட்டை எடுப்பார்கள்... நீங்கள் ஏற்கனவே எடுத்து விட்டீர்கள்.... ஆனாலும் நீங்கள் ஒட்டு கேட்கும் போது தமிழின் பெயரால் கேட்கிறேன். ... தமிழர்களின் பெயரால்  கேட்கிறேன்...என ஒட்டு வாங்குவீர்கள்.

உங்கள் தமிழ் வளர்ப்பு எப்படி இருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு சான்று...

மக்கள் டிவி கூட தமிழ் மிகக் கூடிய வரை தமிழ் வார்த்தைகளை உபயோகம் செய்து தமிழ் மொழி, தமிழர்கள் பற்றி நிகழ்சிகளை ஒளி பரப்புகிறார்கள். உங்கள் கலைர் டிவி இல் மானடுகிறது, மயிலாடுகிறது (அரை குறை ஆடையில் ).  எங்கே போயிற்று உங்கள் செம்மொழி வளர்ப்பு, அறுவடை எல்லாம் ??? ஊருக்குதான் உபதேசமா ?

நான் எதிபார்ப்பது என்ன வென்றால், உங்கள் கடைசி நேர பிரயோகமாக, இது என் கடைசி தேர்தல், தமிழா எங்கே போயிற்று உன் இன மானம், எனக்கு வோட்டளித்து  தமிழன் மானத்தை காப்பாற்று என படுக்கையில் இருந்தபடி ஒரு அரசியல் ஸ்டன்ட் செய்வீர்கள்..  அனால் இதெல்லாம் கேட்க இங்கே பயித்தியக்காரன் யாருமே இல்லை என்பதுதான் உண்மை.  


திமுக, காங்கிரசின் நம்பர் கேம்

தி மு க , காங்கிரஸ் இருவரும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு மற்றவர்களை முட்டாளாக்கப் பார்கிறார்கள். திமுக வின் rising sun, falling sun  ஆகிவிடும் பயம்.

தி மு க கூட்டணியை முறித்துக் கொள்வேன் என்று பயம் காட்டுவது :
* கலைஜர் டிவி இல்  சிபிஐ ரைட்
* 2G இல் கனிமொழி, தயாளுவிடம் சிபிஐ விசாரணை 
* கூட்டணி ஆட்சி கோரிக்கை (இவர்கள் மட்டும் மத்திய அரசில் பங்கு கேட்பார்கள். மற்ற யாரும் இவர்களிடம் கேட்க கூடாது.. என்ன கொடும சார் இது..)

காங்கிரஸ் மிரட்டுவது :
* அதே சிபிஐ ரைட்
* தற்போதைய தமிழக சூழ்நிலை (எத்தனை நாள் தான் குனிஞ்சு குட்டு வாங்குவது )
* தற்போதைய பயம் (திமுகவும் இல்லை, விஜயகாந்தும் இல்லை என்றால் .... ஓணாண்டி புலவர் கதை ஆகிவிடும் நிலை)

இவனுங்க கோடிகணக்கில் பணம் சம்பாதிக்க, கூட்டணி தர்மம் என்கிறார்கள். எங்கயா இருக்கு தர்மம்?

தேர்தல் கமிசனருக்கு ஒரே ஒரு வேண்டுகோள் !
இன்னும் தேர்தல் தேதியை தள்ளி போடாமல், முடிந்தால் இன்னும் முன்கூட்டியே தேர்தல் நடத்துங்கள்.. இந்த மாதிரி அரசியல்வியாதிகளின் தொல்லை தாங்கலை சாமி....



Saturday, March 5, 2011

கடாபிக்கு ஒரு நியாயம்! பக்சேக்கு ஒரு நியாயம்!!!



கடாபி தனக்கு எதிரான மக்களை  கொல்ல ஆரம்பித்ததும் அமெரிக்க முதல் ஐநா வரை வரிந்து கட்டிக்கொண்டு ஏன் கூப்பாடு போடுகிறார்கள் ? அமெரிக்கா உடனே போர்க் கப்பல்களை அனுப்புகிறது ! ஐநா தடை விதித்து அவசரகதியில்  தீர்மானம் நிறை வேற்றுகிறது?  

இதுவே ஏன் இலங்கையில் தமிழ் மக்கள் சொந்த நாடு அதிபரால் லச்சகனக்கில் கொல்லப்பட்ட போது எத்தனை நாடுகள் கூப்பாடு போட்டபோது  அந்தக் கூக்குரல் இவர்களுக்கு விழ வில்லை ? 

கடாபிக்கு ஒரு  நியாயம், பக்சேக்கு ஒரு நியாயமா ? 

இதேபோல் 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைபடயினரால் தொடர்ந்து கொல்லப்பட்டு வரும் நிலையில் கருணாநிதி கடிதம் மட்டுமே எழுதுவதேன் ? துக்கடா நாட்டை கண்டு  இந்தியா பயப்படுவதேன் ?  இல்ல்வளவு நடந்தும் இந்தியக் கடற்படை எங்கு இருக்கிறது, ஏன் ரோந்து  வருவதில்லை ?

இப்படி எத்தனையோ விடை தெரியாத 'ஏன்' கள் ?

ஓட்டுக்கு காசை வாங்கும் தமிழன் இருக்கும் வரை இந்த அவலம் தீராது...

இந்த தேர்தல் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரட்டும். நீங்கள் மாற்றம் செய்பவர்களாக மாறுங்கள்....