பக்கங்கள்

Tuesday, June 10, 2008

காதலின் நீளம்...

என் மனசுக்குள்நீ
பதித்துப் போன காலடித் தடங்களில்
இன்னும் இருக்குதடி ஈரம்.

என் விடியலின் நீளம்
உன்னால் இன்னும்
கூடிக்கொண்டே போகுதடி.

யாருக்கும் தெரியாமல்
கசியும் என் கண்கள்
தொலைத்த தூக்கங்கள் தான் எத்தனை எத்தனை...

என் சுகமும், துக்கமும்
நீதான் என ஆனபின்
துரந்தேன் யாவட்ரையும்
உனக்காக.....

என் கண்களின் ஈரமும்,
மனசுக்குள் உன் காலடி காலடி ஈரமும்
காய்வதற்க்குள் என்
கை பிடித்து விடடி என் அன்பே...

Saturday, June 7, 2008

இதுதாண்டா அரசியல் .. பழைய மொந்தை....

ரொம்ப நாள் கழித்து அரசியல் ஜோக்ஸ் பார்த்த போது இதை மீண்டும் பார்க்க நேர்ந்தது. என்ன தான் பழையது என்றாலும் இப்போதும் இது பொருந்துகிறது ..

காதலியின் எச்சிலில் சாப்பாட்டின் ருசி

எது சுவையான சாப்பாடு?
நல்ல ஹோட்டலில் தான் சுவையான உணவு கிடைக்கும் என்று நம்ம ஆட்கள் கடைகளை தேடி வெகு தூரம் அலைகிறார்கள் . அதனால்தான் மாமி மெஸ் களும் , மாமா மெஸ் களும் அங்கே இங்கே கடை போட்டு இருக்கின்றன. உண்மையில் சாப்பாடு மட்டும் சுவையைத் தருவதில்லை. சாப்பிடும் இடமும், சூழ்நிலையும் ருசியை அதிகரிக்கின்றன அல்லது குறைக்கின்றன. சில சமயம் பரிமாறுபவர்கள் கூட, பரிமாறும் விதத்தில் கூட சுவையைக் கூட்டுகின்றனர். உதாரணமாக, தொலை தூரத்தில் ஒரு மலைக்கோயிலில் கடைகளே இல்லாத இடத்தில், நல்ல உச்சி வெயிலில் உங்களுக்கு வெண்பொங்கல் கெட்டிச்சட்னியுடனோ அல்லது புளியோதரயோ உங்களுக்கு கிடைத்தால் நிச்சயம் அது உங்களுக்கு அமிர்தம் போலத்தான் அது சுமாராக இருந்தாலும்.
ஊர்ப்பக்கம் வயல் காடுகளில் கூலி வேலைக்கு செல்வோர், சாப்பாட்டில் மோர் விட்டுக் கரைத்து வெங்காயம், பச்சை மிளகாய், மோர் மிளகாய் வகையரக்களுடன் மதிய சாப்பாடு கொண்டு செல்வர். நல்ல உச்சி வெயிலில், வயலில் இந்த உணவை விரும்பாதோர் இருக்க முடியுமா
ஆற்றோரங்களில் அப்போதே மீன் பிடித்து அங்கேயே மிகக் குறைந்த மசாலா கொண்டு வறுத்துதரும் மீன் வறுவல் உங்கள் நாவில் எச்சில் உண்டாக்க வில்லையா ?? இந்த சுவை 5 ஸ்டார் ஹோட்டெல்களில் கூட கிடைக்காது. என்ன சொல்றீங்க ?
அப்புறம் காதலன்களுக்கு, காதலியின் எச்சில் ஐஸ்கிரீம் எவ்வளவு சுவையாக இருக்கும் என்பதெல்லாம் வேறு விஷயம். ஒரே இள நீரில் இரண்டு ஸ்ட்ரா போட்டு குடிப்பது .. ஹி .. ஹி.. ஹீ.. அதெல்லாம் தேவாமிர்தம். புது மனைவியின் சாப்பாடு ரொம்பவே ருசிக்கும் வாய்ல வைக்க முடியாட்டியும்... அப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சு இவனே சாப்பாடு செய்ய கற்றுக் கொள்வான் வேறு வழி இல்லாமல்.
மொத்தத்தில சாப்பாடு மட்டும் ருசியை கொடுப்பதில்லை ... இடமும், சூழ்நிலையும், பரிமாறுபவர்கள் எல்லாம் சேர்ந்து தான் ருசியை தீர்மானிக்கின்றன.

Friday, June 6, 2008

என்ன கொடும சார் இது..

முன்னுரை : இது என் சொந்தக் கருத்தே அன்றி வேறல்ல.... யார் மனதையும் புண்படுத்துவது என் நோக்கமும் அல்ல......
இனி என்னுரை ....
என்னடா இவன் மத துவேசங்களை ஏற்படுத்த நினைக்கிறானோ என்று யாரும் என்ன வேண்டாம். மத சமுதாயத்தை விட மனித சமுதாயத்தை விரும்புகிறவன் நான். நான் ஒரு இந்து என்பதால் என்னை பாதித்த நிகழ்வுகளை இங்கு குறிப்பிடுகிறேன். பொதுவாக ஒவ்வொரு மதமும் தனக்கென ஒரு நெறி முறைகளை வகுத்திருக்கிறது. எ கா.. பொதுவாக கிருத்துவர்கள் கிருத்துவ மதத்தைப் பற்றியோ அல்லது இசுலாமியர்கள் இசுலாமிய மதத்தை பற்றியோ யாரிடத்தும் கிண்டல், கேலி செய்வதில்லை. ஆனால் நம் இந்துக்கள் (குறிப்பிட்ட சிலர் ) நமது மதத்தை பற்றியும், கடவுள்களைப் பற்றியும் எல்லை மீறி கிண்டல், கேலி செய்கிறார்கள். சுருக்கமாக, சேற்றை வாரி தங்கள் மேலே போட்டுக் கொள்கிறார்கள். சில சினிமாக்களும் இதற்க்கு விதி விலக்கல்ல. எ கா... சூரியன் படத்தில் ஒரு பாடல் 18 வயது இளமொட்டு மனது ... கந்த சஷ்டி கவசத்தை நாறடித்து விட்டார்கள். எங்கு சஷ்டி கவசத்தை கேட்டாலும் இந்த சினிமா பாடல் ஒரு முறையாவது நியாபகத்தில் வந்து போகிறது. கடவுளர்களின் திருமணங்களை கிண்டல் செய்தும், காமடி வசனம் எழுதியும் பல படங்கள் இன்னும் வந்து கொண்டுதானிருக்கிறது . வருஷம் ஒரு முறை ஊர்ப்பக்கம் செய்யப்படும் திருவிழாக்கள் இன்னும் மோசம். மாரியம்மன் கோவில் விசேசத்தில் நேத்து ராத்திரி யம்மா.. பாட்டு தான் பிரதானமாக ஒலிக்கிறது.
வருஷம் முழுதும் சினிமா பார்கிறாய், பாட்டைக் கேட்கிறாய் ... சரி .. அடஒரு நாள் சாமி பாட்டு கேட்க்க கசக்கிறதா.... இன்னும் ஒரு படி மேலே போய் ரிக்கார்ட் டான்ஸ் ....என்ன கொடும சார் இது... இதுவே ஒரு சர்ச் இல் அல்லது மசூதியில் என்றாவது ஒரு நாள் நீங்கள் குத்துப் பாட்டை கேட்டு இருக்கிறீர்களா .. கிருஸ்துமஸ் அன்றோ ரம்ஜான் அன்றோ ரிக்கார்ட் டான்ஸ் பார்த்திருகிரீர்களா ??? ஆனால் நாம் நம்முடைய மனசாட்சியை என்றோ கழற்றி வைத்து விட்டோம் . மட்டுமல்ல , அதைப் பற்றி கவலைப் படக் கூட மறந்து விட்டோம்.
என்று நாம் இது போன்ற மதத்தை இழிவு படுத்தும் செயல்களை உணரப் போகிறோம். அட அரசியல் வாதிகளை எடுத்தக் கொள்ளுங்களேன். அவர்கள் இந்து மதத்தைப் பெண்டு நிமித்துகிறார்கள். எதோ அவர்கள் பங்குக்கு அவர்கள் .... இதே ..வேறு மதத்தைப் பற்றி கிண்டல் செய்யட்டும் பார்க்கலாம். அவர்கள் ஒழுங்காக ஊர் போய் சேர முடியாது. ஆனால் நமது மதத்தை பற்றி கிண்டல் செய்து விட்டு கை தட்டல் வாங்கி விட்டு பத்திரமாக ஊர் போய் சேர்வார்கள். ஏனெனில் இது இந்தியா , நாம் இந்தியர்கள் .....

Thursday, June 5, 2008

சிம்புவின் பதிவு நீக்கம்

சிலர் சிம்புவின் பதிவுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதால் இந்த வலைப்பதிவிலிருந்து இதை நீக்குகிறேன்.

Wednesday, June 4, 2008

முதல்வருக்கு ஒரு பகிரங்க கடிதம்

நீங்கள் மனசாட்சியுடயவர்களாயின், இந்த கடிதத்தை நீங்கள் படிப்பதுடன் நிறுத்தாமல் இதில் உங்கள் கருத்துக்களை பின்னூட்டமளியுங்கள். மட்டுமல்ல, இதை உங்கள் நண்பர்களிடத்தும் கொண்டு சேருங்கள். ஒரு கை தட்டினால் ஓசை வருவதில்லை..... உங்கள் கைகளையும் சேர்த்து தட்டுங்கள் .... ஓசை ஒலிக்கட்டும் ... பலமாக......
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு .....
வணக்கம். தங்களின் 85 வது பிறந்த நாளை கொண்டாடிய இந்த வேளையில் உங்கள் முன் சில கோரிக்கைகளை வைக்கிறேன். நடப்பவைகளை கண்டு ஏதேனும் செய்ய முடியாதா இந்த சமூகத்திற்கு என்னும் ஆற்றாமையில் தான் இதை உங்களுக்கு எழுதுகிறேன்.
கோரிக்கை 1 :
பேருந்தில் நெடுந்தூரப் பயணங்கள் எல்லாருக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. எல்லா மக்களும் பெரும்பாலும் பேருந்தையே பயன்படுத்துகிறார்கள். ஆனால் பேருந்து நிலையங்களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது? பேருந்து நிலையங்களில் பேருந்து நுழையும் முன்பே எல்லோரும் மூக்கைப் பொத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. அவ்வளவு துர் நாற்றம். மட்டுமல்ல, கிருமிகளின் கூடாரமும் கூட... எச்சில் களை, குப்பைகளை மிதிக்காமல் எங்கும் நகர முடியாது.
ஒவ்வொரு ஆட்சியும் , அரசியல்வாதிகளும் ஆட்சிக்கு வர இலவசங்களை வாரி இறைக்கிறார்கள். தாங்கள் கூட இலவச கலர் டிவி முதல் கியாஸ் அடுப்பு வரை அளித்திருக்கிறீர்கள். ஆனால் உண்மையாக தேவைப்படும் இலவசம் எது தெரியுமா? பேருந்து நிலையங்கள் முதல் அனைத்து சுற்றுலா தளங்கள் வரை அனைத்து பொது இடங்களிலும் இலவச பொதுக் கழிப்பிடங்களை அரசு சார்பில் அமைக்க வேண்டும். 2 ரூபாய்க்கு அரிசி என்கிறீர்கள் ...ஆனால் 2 ருபாய் கொடுத்து தானே சிறுநீர் கழிக்க முடிகிறது. சாமான்யர்களும், நடுத்தர மக்களும் இதற்க்கு ரொம்பவே யோசித்துதான் பொது இடங்களை திறந்த வெளி கழிப்பிடங்களாக மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
வெளி நாட்டுப் பயணிகள் முகம் சுளிப்பதுடன், தமிழ்நாடே ஒரு கூவம் போல நாற்றமெடுக்கிறது. சரி, காசு கொடுத்துதான் பொதுக் கழிப்பிடம் செல்கிறோம் என்றே வைத்துக் கொள்ளுங்கள். அதன் இன்றைய பராமரிப்பு எப்படி இருக்கிறது.. உடைந்த கதவுகள்... கைகளால் தொட முடியாத டப்பா .. நாற்றமெடுக்கும் அறைகள் ... இதற்கே 2 ருபாய் ... சுகாதாரமான சமூகத்தை உருவாக்குவது அரசின் கடமை... எனவே இலவச பொதுக் கழிப்பிடங்களை உடனடியாக அமல் படுத்துவதுடன் முறையான பராமரிப்பும் நடைபெற ஆவன செய்ய வேண்டும்.
கோரிக்கை 2 :
நெடுந்தூரப் பயணங்களில் பேருந்துகள் அவர் அவர்களுக்கு பிடித்த நெடுஞ்சாலை உணவகங்களில் பேருந்தை நிறுத்துவது வாடிக்கை. ஆனால் அங்கே எவ்வளவு கொள்ளை நடக்கிறது தெரியுமா? வேறு வழியே இல்லாமல் பயணிகள் இந்த உணவகங்களில் யானை விலை , குதிரை விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். ( உதாரணத்திற்கு ... 13 ரூபாய் தண்ணீர் பாட்டிலின் விலை இங்கே 17 ரூபாய். 20 ரூபாய் குளிர் பானத்தின் விலை 27 ரூபாய். பொது மக்கள் என்ன பாவம் செய்தார்கள் . இந்த தினசரி பகல் கொள்ளைக் கு அரசின் நடவடிக்கை தான் என்ன ??? உடனடியாக இந்த வணிகர்களை தடை செய்வதுடன் அரசே தமிழ்நாடு சுற்றுலா கழகம் சார்பில் இத்தகைய கடைகளை நியாயமான முறையில், நியாய விலையில் நடத்த உத்தரவிட வேண்டும்.
கோரிக்கை 3 :
பிளாஸ்டிக் குப்பைகள் எங்கும் பெருகி வரும் நிலையில் சுற்றுச் சூழல் மிகவும் சீர்கெட்டு விட்டது. அனைத்து விலங்குகளும் இவைகளை உண்டு மரணிக்கின்றன. எனவே, குறிப்பிட்ட தடிமன் இல்லாத பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும். பேப்பர் கப், தொன்னை போன்றவற்றின் உற்பத்திக்கும், விற்பனைக்கும் மானியம் அளிக்க வேண்டும்.
GREEN CITY, CLEAN CITY இந்த வரிகள் மாநகராட்சி சார்பில் பல இடங்களில் பார்க்க முடிகிறது. இவை கேட்க்க நன்றாகத்தான் இருக்கிறது . ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமானால் பெரும்பாலான பொது இடங்களில் குப்பை தொட்டிகளே இல்லை. குப்பைத் தொட்டியிலே குப்பையைப் போட நினைக்கும் என்னைப் போன்ற சில பொது ஜனங்கள் கூட குப்பைத் தொட்டி இல்லாதபடியால் வீதியிலே போட வேண்டி இருக்கிறது. நமது நாடும் சிங்கப்பூர் ஆக வேண்டுமானால், பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்க வேண்டும். தேவையான அளவு குப்பைத் தொட்டிகளை எங்கும் நிறுவ வேண்டும்.
கோரிக்கை 4 :
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் .... இவை அரசின் விளம்பர வாசகங்கள். ஆனால் இன்று தமிழ்நாடுதான் மிக வேகமாக மரங்களை அழித்து வருகிறது. ஏற்க்கனவே, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சாலையோர மரங்கள் விரகாகி விட்டன. ரியல் எஸ்டேட் புண்ணியவான்கள், தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களை அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாற்றி விட்டனர். வன விரிவாக்க துறை நன்றாக குறட்டை விட்டுத் தூங்குகிறது. அதன் செயல்பாடுகள் சொல்லும் விதத்தில் இல்லை. எனவே , அரசு தலையிட்டு, மரம் வளர்ப்பு என்பதை தீவிரப்படுத்த வேண்டும். இது உடனடியாக கவனிக்கப் பட வேண்டிய விஷயம்.
இன்னும் பல கோரிக்கைகள் இது போல நெஞ்சில் குமுறிக் கொண்டு இருக்கிறது. எனினும், மேலே கூறியவை உடனடியாக தீர்க்கப் பட வேண்டிய விஷயம் என்பதால் இவைகளை மட்டும் இப்போதைக்கு உங்கள் முன் வைக்கிறேன், உங்களைப் போன்றவர்களால் நல்லது செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் .....

இது ஒரிஜினல், நகல் இல்லை...

இந்த SUN தொலைக்காட்சியின் அட்டகாசம் தாங்கலை சாமி ... எதோ.. MUSIC Channel இவர்களுடைய கண்டுபிடிப்பு மாதிரி நொடிக்கொரு முறை இது ஒரிஜினல், நகல் இல்லை என விளம்பரப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
கலைஞர் தொலைக்காட்சியின் இசையருவியை குறி வைத்து இந்த தாக்குதல் நடக்கிறது.
ஆனால் இவர்கள் VIJAY TV- ல் சுட்ட நிகழ்ச்சிகளை என்ன சொல்வது? முதலில் தன் முதுகில் உள்ள அழுக்கை துடைத்துவிட்டு அடுத்தவர்களை குறை சொல்லட்டும் சன் நிர்வாகம்.

என்ன நான் சொல்றது ????