பக்கங்கள்

Sunday, March 27, 2011

இலவச லேப்டாப் எப்படி இருக்கும் ?

சும்மா பொறி கடலை தற மாதிரி ஆளாளுக்கு லேப்டாப் தரேன்னு ரோட்ல போற வறவன் எல்லாம் அறிக்கை விடறான். ஒரு வேல எல்லாருமே மாணவர்களுக்கு தரேன்னு சொல்லி இப்படி ஒரு லேப்டாப் கொடுத்தா எப்படி இருக்கும் ? 
சும்மா ஒரு ஜாலி கற்பனை தான்...





மிக்சி , கிரைண்டர், பேன், லேப்டாப், ஆடு, மாடு, பணம், அரிசி, தாலி, தங்கம் - னு ஒவ் வொண்ணா தராம பேசாம தினமும் காலைல, சாயங்காலம்   டிபன், மதியம் சாப்பாடு இப்படி குடுத்தீங்கன்னா  .. நாங்க பாட்டுக்கு காலை நீட்டி படுத்துக் கிட்டு மானாட மயிலாட டிவி ல பார்த்துகிட்டு இருப்போம்... ஹி....ஹி... கொஞ்சம் கரண்ட் கொடுங்கப்பா....

(பின்னணியில் ஒரு பாட்டு கேட்கிறது ...எ..ஆர் ரஹ்மான் இசையில் ....)

செம்மொழியான தமிழ் மொழியாம்......
உழைத்து வாழ்ந்தோம், உழைத்து  வாழ்வோம்...


பின் குறிப்பு: ப்ளீஸ் யாராவது இந்த பாட்ட இப்போதைய சூழ்நிலைக்கு வரிகளை மாத்தி ரீமிக்ஸ் பண்ணுங்களேன்!  

Sunday, March 6, 2011

பார்த்து ரசிக்க வேண்டிய எலெக்சன் காமெடி.....

"MUST WATCH CLIPPINGS"  பார்த்து ரசிக்க வேண்டிய காமெடி......எலெக்சன்  காமெடி.. 



கலைஞரின் கடைசி நேர ஸ்டன்ட் என்னவாக இருக்கும் ?

அய்யா கருணாநிதி....

காங்கிரஸ் 3 சீட்டு கூட கேட்டபோது, வழக்கம்போல  கடிதம் எழுதாம, நானே கேள்வி - நானே பதில்கள் போடாம, அவசர அவசரமாக உயர்நிலை குழு கூடி கூட்டணி முறிவு என அறிவித்தீர்களே, இதுவே இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோது நான் என்ன செய்ய முடியும் என்று அமைதி காத்தீர்கள் ???? தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போது வெறும் வெற்று அறிக்கை மட்டும் விட முடிந்தது ???

தான், தன் குடும்பம் என்பவர்கள் மட்டுமே இப்படி ஒரு நிலைபாட்டை எடுப்பார்கள்... நீங்கள் ஏற்கனவே எடுத்து விட்டீர்கள்.... ஆனாலும் நீங்கள் ஒட்டு கேட்கும் போது தமிழின் பெயரால் கேட்கிறேன். ... தமிழர்களின் பெயரால்  கேட்கிறேன்...என ஒட்டு வாங்குவீர்கள்.

உங்கள் தமிழ் வளர்ப்பு எப்படி இருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு சான்று...

மக்கள் டிவி கூட தமிழ் மிகக் கூடிய வரை தமிழ் வார்த்தைகளை உபயோகம் செய்து தமிழ் மொழி, தமிழர்கள் பற்றி நிகழ்சிகளை ஒளி பரப்புகிறார்கள். உங்கள் கலைர் டிவி இல் மானடுகிறது, மயிலாடுகிறது (அரை குறை ஆடையில் ).  எங்கே போயிற்று உங்கள் செம்மொழி வளர்ப்பு, அறுவடை எல்லாம் ??? ஊருக்குதான் உபதேசமா ?

நான் எதிபார்ப்பது என்ன வென்றால், உங்கள் கடைசி நேர பிரயோகமாக, இது என் கடைசி தேர்தல், தமிழா எங்கே போயிற்று உன் இன மானம், எனக்கு வோட்டளித்து  தமிழன் மானத்தை காப்பாற்று என படுக்கையில் இருந்தபடி ஒரு அரசியல் ஸ்டன்ட் செய்வீர்கள்..  அனால் இதெல்லாம் கேட்க இங்கே பயித்தியக்காரன் யாருமே இல்லை என்பதுதான் உண்மை.  


திமுக, காங்கிரசின் நம்பர் கேம்

தி மு க , காங்கிரஸ் இருவரும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு மற்றவர்களை முட்டாளாக்கப் பார்கிறார்கள். திமுக வின் rising sun, falling sun  ஆகிவிடும் பயம்.

தி மு க கூட்டணியை முறித்துக் கொள்வேன் என்று பயம் காட்டுவது :
* கலைஜர் டிவி இல்  சிபிஐ ரைட்
* 2G இல் கனிமொழி, தயாளுவிடம் சிபிஐ விசாரணை 
* கூட்டணி ஆட்சி கோரிக்கை (இவர்கள் மட்டும் மத்திய அரசில் பங்கு கேட்பார்கள். மற்ற யாரும் இவர்களிடம் கேட்க கூடாது.. என்ன கொடும சார் இது..)

காங்கிரஸ் மிரட்டுவது :
* அதே சிபிஐ ரைட்
* தற்போதைய தமிழக சூழ்நிலை (எத்தனை நாள் தான் குனிஞ்சு குட்டு வாங்குவது )
* தற்போதைய பயம் (திமுகவும் இல்லை, விஜயகாந்தும் இல்லை என்றால் .... ஓணாண்டி புலவர் கதை ஆகிவிடும் நிலை)

இவனுங்க கோடிகணக்கில் பணம் சம்பாதிக்க, கூட்டணி தர்மம் என்கிறார்கள். எங்கயா இருக்கு தர்மம்?

தேர்தல் கமிசனருக்கு ஒரே ஒரு வேண்டுகோள் !
இன்னும் தேர்தல் தேதியை தள்ளி போடாமல், முடிந்தால் இன்னும் முன்கூட்டியே தேர்தல் நடத்துங்கள்.. இந்த மாதிரி அரசியல்வியாதிகளின் தொல்லை தாங்கலை சாமி....



Saturday, March 5, 2011

கடாபிக்கு ஒரு நியாயம்! பக்சேக்கு ஒரு நியாயம்!!!



கடாபி தனக்கு எதிரான மக்களை  கொல்ல ஆரம்பித்ததும் அமெரிக்க முதல் ஐநா வரை வரிந்து கட்டிக்கொண்டு ஏன் கூப்பாடு போடுகிறார்கள் ? அமெரிக்கா உடனே போர்க் கப்பல்களை அனுப்புகிறது ! ஐநா தடை விதித்து அவசரகதியில்  தீர்மானம் நிறை வேற்றுகிறது?  

இதுவே ஏன் இலங்கையில் தமிழ் மக்கள் சொந்த நாடு அதிபரால் லச்சகனக்கில் கொல்லப்பட்ட போது எத்தனை நாடுகள் கூப்பாடு போட்டபோது  அந்தக் கூக்குரல் இவர்களுக்கு விழ வில்லை ? 

கடாபிக்கு ஒரு  நியாயம், பக்சேக்கு ஒரு நியாயமா ? 

இதேபோல் 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைபடயினரால் தொடர்ந்து கொல்லப்பட்டு வரும் நிலையில் கருணாநிதி கடிதம் மட்டுமே எழுதுவதேன் ? துக்கடா நாட்டை கண்டு  இந்தியா பயப்படுவதேன் ?  இல்ல்வளவு நடந்தும் இந்தியக் கடற்படை எங்கு இருக்கிறது, ஏன் ரோந்து  வருவதில்லை ?

இப்படி எத்தனையோ விடை தெரியாத 'ஏன்' கள் ?

ஓட்டுக்கு காசை வாங்கும் தமிழன் இருக்கும் வரை இந்த அவலம் தீராது...

இந்த தேர்தல் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரட்டும். நீங்கள் மாற்றம் செய்பவர்களாக மாறுங்கள்....