பக்கங்கள்

Saturday, March 29, 2008

அகிலனின் - கனவுகளின் தொலைவு

கனவுகளின் தொலைவு http://agiilankanavu.blogspot.com/ வலைத் தளத்தை ஒருமுறை தரிசித்து பாருங்கள். கீழே காணும் கவிதை பிரியம் என்ற தலைப்பில் திரு. அகிலன் எழுதியது. வாசித்துப் பாருங்கள்... மிக அருமை...
பிரியம்
அவள் அழைத்துப்போன
கனவின் பசிய நிலத்தில்
வானவில்லின்
வர்ணங்களைக்கொண்ட
பறவையின் பாடல்
வழிந்து கொண்டிருந்தது திசையெங்கும்.
பாடலின்திசைகளில்
நான் கிறங்கிய கணத்தில்
சடுதியாய் நீங்கிப்போனாள்
கூடவே போயிற்று
அவளது நிலமும்
வானவில் பறவையும்.
நான் அலைந்துகொண்டிருக்கிறேன்.
அந்த கனவுக்குள்
மறுபடியும் நுழையும்
திசைகளைத் தேடி.
நன்றி : அகிலன்.
Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

No comments: