பக்கங்கள்

Wednesday, February 20, 2008

கனவிலாவது...

என் புன்னகையைப்
பறித்துக் கொண்டு
கண்ணீரை மட்டும்
விட்டுச் சென்ற -என்
கனவுக் காதலியே! - நீ
கண்ணீரை மட்டுமா
விட்டுச் சென்றாய்... -ஆழகிய
கனவுகளையும் அல்லவா
விட்டுச் சென்றாய்...
விடியலைத் தேடும் - என்
வாழ்க்கையில் கண நேரம்
மின் மினியாய் மின்னி மறைந்தவளே!
என் கண்ணீர் கூட
காய்ந்து விடும்- ஆனால்
உன் நினைவுகள்
என்றும் காயாதடி!!
என் மனசுக்குள் கொலுசாய்
உன் நினைவுகள்
என்றும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
அடி என் கனவுக் காதலியே! - என்னை
கனவிலாவது காதலித்துவிடடி!!
-- 'என் மனசு'

Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

No comments: