பக்கங்கள்

Saturday, February 23, 2008

சில பழக்கங்களும், அதற்க்கான காரணங்களும் :

நம்மிடையே நிலவி வரும் / வந்த சில பழக்க வழக்கங்களும், அதற்கான உண்மையான காரணங்களும் பற்றி சிந்தித்தபோது உதித்தவை இவை:
நொறுங்க தின்றால் நூறு வயது வாழலாம்:
அட அட .. இந்த பழமொழி சொன்னவன் விளக்கமாக சொல்லாமல் போய் விட்டான். இதை மட்டும் நம்ம ஆட்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அடித்து நொறுக்குகிறார்கள்.
ஆனால் உண்மையில் நாம் சாப்பிடும் உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்பதே உண்மையான தத்துவம்.
இரவில் தயிர் சாப்பிடக்கூடாது:
இரவில் தயிர் அருந்துவதால் செரிமானம் பாதிக்கப் படுவதால் அறிவியல் ரீதியாகவே அதை இரவில் தவிர்ப்பது நல்லது.
சாணம் தெளிப்பது:
சாணம் ஒரு நல்ல கிருமி நாசினி. அதை தெளிப்பதால் வீட்டினுள் கிருமிகளின் வரவு தவிர்க்கப்படுகிறது மற்றும் அது தரையை கெட்டிப்படுதுவதுடன் புழுதி வராமலும் காக்கிறது.
இரவில் உண்ணாதே:
அந்த காலங்களில் எல்லோரும் இரவு ஏழு மணிக்கு முன்பே உணவு அருந்தி விடுவர். அப்போதெல்லாம் விளக்கு வெளிச்சம் குறைவு என்பதால் இந்த ஏற்பாடு. போதிய வெளிச்சம் இல்லாமல் உணவு உண்ணும்போது பூச்சிகள், பல்லி உணவில் கலக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இப்போது அந்தக் கவலை இல்லை. எனவே அந்த அறிவுரை இந்தக் காலத்திற்கு உதவாது.
---- இன்னும் எழுதுவோம்.
Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

No comments: