பக்கங்கள்

Friday, February 15, 2008

என் மனசு பக்கங்கள்.....

தனக்கென தனி வாசகர் வட்டத்தை வைத்திருக்கும் திரு.S.ராமகிருஷ்னன் அவர்களுக்கு என் முதல் வணக்கம். எனது பயனத்தையும் அவரிடமிருந்தே தொடர்கிறேன். வாசிப்பில் ருசி கண்ட எனக்கு எழுதவும் ருசிப்படுத்தியது அவர் எழுத்து...

மனசு.....
மனசு என்பது என்ன??? பொருளா?... இல்லை உணர்வா?....

மனசு ஒரு ஆச்சர்யப்படத்தக்க விசயம்...அதை மாயக் கண்ணாடி அல்லது மாயக் குதிரை என்பார்கள். உலகிலேயே அதி வேகமானது மனசுதான். ஜப்பானில் இருந்து ஷண நேரத்தில் மனக்குதிரையில் இலங்கா செல்லலாம். விநாயகர், சிவன்-பார்வதியை சுற்றி வந்து பழம் வாங்கியதற்கு பதிலாக இன்னும் வேகமாக மனக்குதிரையில் சுற்றி வந்து பழம் வாங்கியிருக்கலாம்.

குதிரைக்கு கடிவாளம் போடுவது போல மனதினை கடிவாளமிட்டவன் வாழ்க்கையை வெற்றி கொள்கிறான். மனதினை கடிவாளம் போடாதவன் மங்கையிடமோ இல்லை மதுவிடமோ சரணாகதி அடைகிறான். நமது தேடல்கள் எல்லாம் மனதின் தேடல்களே......தேடல்களின் வெளிப்பாடே திரு.S.ராமகிருஷ்னன் போன்றோர்.

ஒரு பழத்தில் நூற்றுக்கணக்கான விருட்சங்கள் மறைந்திருந்தாலும் தேடலில் வெற்றி பெற்றவையே முளை விடுகின்றன...ராமகிருஷ்னன்களாகின்றன...

இங்கே எனது மனக் குதிரையை முடிந்த மட்டும் தட்டுகிறேன். அவை ஒடும் வரை ஒடட்டும்...
Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

1 comment:

Anonymous said...

என் மனசு...அருமை... Continue... Continue....