பக்கங்கள்

Wednesday, February 20, 2008

அவள்!

அந்த ஆறு
ஆரவாரமாகத்தான்
ஒடிகொண்டிருந்தது - அதனுடன்
அவள் சிரிப்பலைகளையும் சேர்த்து...
----- அவள்
எனக்கு ஆற்றில் தான்
அறிமுகமானாள் - அவள்
தனது துணிகளைத்தான்
துவைத்துக் கொண்டிருந்தாள் - ஏனோ!
என் மனசுதான்
அழுக்காகிப் போனது.
நாட்கள் நகர்ந்தன...
பார்வைப் பரிமாறல்கள்
தொடர்ந்தன.. - என்னுள்
ஆற்றங்கரையே சகலமும் ஆயிற்று.
வசந்தமும் கழிந்தது, -ஏனோ
சில நாட்களாய்
அவள் வருவதேயில்லை
அவளுக்காக கத்திருந்து
கண்களில் காளான்
பூத்துதான் போனது.
எதிர்க் கரைகள் கூட
எனக்காக இரகசியமாக அழுதன.
கரையோரமாக அவளின் அழியாத
காலடித் தடங்களை
இன்னமும் தேடிக்கொண்டுதானிருக்கிறேன்.
அந்த ஆறு
இன்னமும் ஒடிக்கொண்டுதானிருக்கிறது
-ஆனால்
சலனமின்றி, அமைதியாக....
-- 'என் மனசு'

Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

1 comment:

Anonymous said...

இரகசியக் காதல்..... இரகசியமாகவே போனதோ?? --- விடியல்