பக்கங்கள்

Friday, February 15, 2008

கதை சொல்லிகள்...

அநேகமாக எல்லாருக்கும் கதை கேட்கப் பிடிக்கும். ஒவ்வொரும் கதை சொல்லும் விதத்தில் கதையின் சுவை கூடும் அல்லது குறையும். ருஷ்யக் கதாசிரியர் 'சிங்கிஸ் ஐத்மாத்தவின்' கதை சொல்லும் பாங்கே அலாதியானது. ஒரு முறை, தான் சிறுவனாக இருந்தபோது நடந்த சுவையான சம்பவங்களை தன் மகன் நோய்வாய் பட்ட தருணத்தில், படுத்த படுக்கையாக இருந்தபோது அவர் சொல்லிய கதைகள் 'அப்பா சிறுவனாக இருந்தபோது' என்ற தலைப்பில் வெளி வந்து பெரும் வரவேற்பை பெற்றது. அவர் கதை சொன்ன பாங்கில் இன்று வரை யாரும் கதை சொல்லவே இல்லை. ஒரு குதிரையின் வாழ்க்கையை 'குல்சாரி' மூலம் அருமையாக, கண்ணீர் மல்க வெளிப்படுத்தியிருப்பார்.

காலம் மிதமிஞ்சிய வேகத்தில் சென்று கொண்டே இருக்கிறது. வாழ்க்கையை அதன் போக்கில் விட்டவர்கள் அதன் ஒட்டத்தினூடே அடித்துச்செல்லப்படுகிறார்கள். எங்கும் கண்ணுக்கெட்டிய வரை ஒரே போல் பனி படர்ந்த 'ஸ்தெப்பி வெளி'... முடிவில்லாத சாலைகள்....பழங்காலத்துக் கோட்டைகள்...இவை யாவற்றிலும் காலம் உறைந்திருக்கிறது. பல கதைகள் உறைந்திருக்கின்றன.
Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

No comments: