பக்கங்கள்

Friday, May 23, 2008

யோசிக்க வேண்டிய நேரம்....

நமது வேலைக்கு இடையே நம்மை ரிலாக்ஸ் செய்ய நாம் என்ன செய்கிறோம்? யோசித்துப் பார்த்தால் இசை, திரைப்படம், கேம்ஸ் இவைகளைத் தாண்டி வேறு என்ன செய்கிறோம் என்றால் கிடைக்கும் பதில்அனேகமாக ஒன்றுமே இருக்காது. அதுவும் நகர வாழ்வில் நாம் டிஸ்கோதே, பார்ட்டி தவிர வேறு எதை பற்றியும் நினைப்பதே இல்லை.


இயற்க்கையை தரிசிக்க வருஷம் ஒருமுறை (Tour) நினைக்கிறோம். சிலருக்கு மட்டுமே அது முடிகிறது. அட நமது வீட்டின் மாடியில் நின்று கொண்டு பால் நிலவை ரசிக்க கூட நேரம் இல்லாமல் தொலைக்காட்சிகளில் மூழ்கி கிடக்கிறோம். சிறு பிள்ளைகள் கூட அவர்களுக்கேயான குறும்புகளை தொலைத்து விட்டு பெரிய மனிதர்கள் போல நடக்க நினைக்கிறார்கள். சூழ்நிலை அவர்களையும் விட்டு வைக்க வில்லை. அல்லது நாமே அது மாதிரியான சூழலை உருவாக்கி விட்டோம். Digital Experience என்று சொல்கிறோமே அதே போல நமது வாழ்வும் Digital Life ஆக மாறி விட்டது. TV & Media வின் ஆதிக்கம் நம் மேல் பலமாக திரை போல விழுந்து இருக்கிறது. நமது அடுத்த தலை முறை எங்கே செல்கிறது. அதை நாம் எங்கே அழைத்து செல்லப் போகிறோம் ?

இது யோசிக்க வேண்டிய நேரம். யோசியுங்கள்....

Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

No comments: