பக்கங்கள்

Saturday, May 10, 2008

ஸ்ரீரங்கநாதர்...


ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில்

புகழ் பெற்ற வைணவ தலமான ஸ்ரீரங்கம் ( Srirangam) ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் திருச்சி நகரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஸ்ரீ ரங்கம் கோயில் விமானமானது திருப்பாற்கடலின்று தோன்றியது. இதை நெடுங்காலமாக பூசித்து வந்த பிரம்மதேவன் திருவரங்கநாதருக்கு நித்திய பூசை புரிந்து வரும்படிசூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான இராமபிரான் அயோத்தியில் வழிபட்டு வருகிறார். தனது முடிசூட்டு விழாவினைக் காண வந்த விபீஷணனுக்கு தான் பூஜித்து வந்த இவ்விமானத்தை அளித்தார்.

அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் விபீஷணன் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்து விட்டு திரும்ப எடுக்கும் போது தரையை விட்டு வரவில்லை. அது கண்டு கலங்கிய விபீஷணனை அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான்.அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார்.விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர் தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதி அளித்தார்.பின்னர் தர்மவர்ம சோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டான்.அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்து போக தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிøல் சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter